தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
திமிரு, காளை போன்ற ஆக்ஷ்ன் படங்களை இயக்கிய தருண் கோபி, படம் இயக்குவதை சிறிது காலம் ஒதுக்கி வைத்துவிட்டு, மாயாண்டி குடும்பத்தார், பேச்சியக்கா மருமகன் போன்ற படங்களில் ஹீரோவாக நடித்தார். இந்நிலையில், இப்போது மீண்டும் டைரக்ஷ்னுக்கே வந்துவிட்டார். புதுமுகம் ஸ்ரீமதி என்பவர் ஹீரோயினாக நடிக்க இவரே ஹீரோ வேடம் ஏற்று, இயக்கவும் செய்துள்ளார். வெறி என்று பெயர் வைத்துள்ள இப்படத்தை தொடர்ந்து 76 நாட்களில் படமாக்கி முடித்திருக்கிறார். சென்னை, மதுரை, உசிலம்பட்டி, வத்தலகுண்டு உள்ளிட்ட பல ஊர்களில் படப்பிடிப்பை நடத்தியுள்ளார்.
ஆக்ஷ்ன், காதல், சென்டிமென்ட் உள்ளிட்ட எல்லா விஷயங்களும் இப்படத்தில் இருக்கும் என்றும், சொல்லப்போனால் திமிரு படத்தின் பார்ட்-2 வாக கூட தோன்றும் என்கிறார் தருண் கோபி. அதோடு இப்படத்தை பார்க்கும் ரசிகர்கள் சீட்டின் நுனியில் உட்கார்ந்து பார்க்கும் அளவுக்கு வெறி படம் இருக்கும் என்றும், படத்தின் ஹைலைட்டாக டி.ஆர்., சரத்குமார், ஆண்ட்ரியா, டி.கே.கலா ஆகியோர் ஒரு பாடல்களை பாடியிருப்பதாகவும், மே மாதம் படத்தை ரிலீஸ் செய்ய இருப்பதாகவும் தருண் கோபி கூறினார்.