'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
அமரகாவியம் படத்தில் நாயகியாக நடித்த மியா ஜார்ஜ். அந்த படத்துக்கு பிறகு கோலிவுட்டின் உச்சத்திற்கு போகலாம் என்று கனவு கண்டார். படம் தோல்வியை தழுவியது. கோடம்பாக்கத்தில் மியாவைத் தேடினால் காணவில்லை. மாநகர மலையாளத்தில் சிருஷ்சி இயக்கத்தில் அனார்கலி என்ற படத்தில் நடிக்க போய் விட்டார். இந்த படத்தில் மியா ஜார்ஜ்க்கு ஜோடியாக பிருத்விராஜ் நடித்துள்ளார். படபிடிப்பு இறுதிட்ட நிலையில் இன்னும் பத்துநாள் படப்பிடிப்பு நடக்க உள்ளன. இந்நிலையில் மீண்டும் தமிழுக்கு தாவியிருக்கிறார் மியா. நெல்சன் வெங்கடேசன் இயக்கும் ஒருநாள் கூத்து படத்தில் அட்டக்கத்தி தினேஷ் ஜோடியாக நடிக்கிறார். இன்று சென்னையில் படபிடிப்பு தொடங்கி உள்ளது. தொடர்ந்து மூன்று படங்களில் பேச்சு வார்த்தை நடத்தி இன்னும் ஒப்பந்தத்தில் கையெழுத்து போடாமல் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அமரகாவியம் படத்துக்கு பிறகு அம்மணிக்கு படம் இல்லாமல் போனதற்கு காரணம் அதிக சம்பளம் கேட்டுள்ளார். தற்போது அந்த பிடிவாதத்திலிருந்து இறங்கி வந்துள்ளார்.