பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு | மீண்டும் சீரியலில் கம்பேக் கொடுத்த ஸ்ருதி சண்முகப்ரியா! | ஓடிடியிலும் சாதனை படைக்கும் 'ஹனுமான்' |
தமிழ்நாட்டை சேர்ந்த நட்ராஜ், இந்தியில் பிரபலமான ஒளிப்பதிவாளர். பாலிவுட் நட்சத்திரங்கள் நட்ராஜின் தேதிக்காக காத்திருக்க... அவரோ விஜய்யின் புலியை படம்பிடிப்பதில் பிசியாக இருக்கிறார். நட்ராஜின் இன்னொரு முகம் நடிகர். நாளை, மிளகா, சக்கரவியூகம் என நிறைய படங்களில் நடித்தார். ஆனால் சதுரங்க வேட்டை தான் அவரை நடிகராக அடையாளம் காட்டியது. தற்போது வெளிவந்துள்ள கதம் கதம் படத்தில் அவரின் நடிப்பு பரவலாக பேசப்படுகிறது. புலி படப்பிடிப்பில் பிசியாக இருந்தவருடன் பேசியதிலிருந்து...
* நடித்த படங்கள் வெற்றி பெற்றுக் கொண்டிருக்கும்போது திடீரென்று கேமராவை தூக்கிக் கொண்டு ஒளிப்பதிவு செய்ய சென்று விட்டீர்களே?
ஒரே விஷயம்தான். ஒளிப்பதிவு எனது உயிர் மாதிரி. அதுதான் என்னை எனக்கே அடையாளம் காட்டியது. குடும்பம் இல்லாமல்கூட என்னால் வாழ்ந்து விட முடியும். கேமரா இல்லாமல் வாழ முடியாது. நடிப்பு என்பது உடம்பு மாதிரி, நடிப்பு என்னை வெளியில் அடையாளம் காட்டியது. ஒன்றில்லாமல் இன்னொன்றில்லைதான். ஆனால் உயிரா, உடலா என்றால் உயிர்தானே முன்னாடி நிற்கிறது. தமிழ் படத்திற்கு ஒளிப்பதிவு செய்து பல ஆண்டுகள் ஆகிறது. நான் சென்னைக்கு வந்தால் எல்லோரும் என்னை கேட்கிற முதல் கேள்வியே ஏன் தமிழ் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்யவில்லை என்பதுதான். அதனால் ஒரு தமிழ் படத்தில் ஒளிப்பதிவாளராக வேலை செய்ய வேண்டும் என்று காத்திருந்தாபோது வந்த வாய்ப்பு இது. அதுவும் ஒரு ஒளிப்பதிவாளனுக்கு பிடித்தமான கலர்புல் விளையாட்டு புலி படத்தில் இருக்கிறது. பிரமாண்டம், பிரமிப்பு இவற்றை காட்ட வேண்டிய சவால். புலி அதுவாக வாழ்ந்து விடுவது சுலபம். அதை பராமரிக்கிறது சிரமம். அதனை இயக்குனர் சிம்பு தேவன் செய்திருக்கிறார் நான் அவருக்கு உதவியிருக்கிறேன்.
* தொடர்ந்து நடிப்பீர்களா?
கண்டிப்பாக நடிப்பேன். சதுரங்க வேட்டை, கதம் கதம் படங்களுக்கு பிறகு நிறைய தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் என்னை தேடி வருகிறார்கள். நேரம் கிடைக்கும்போது கதை கேட்டு வைத்துக் கொள்கிறேன். ஆனால் எதிலும் கமிட் பண்ணவில்லை. காரணம் புலி பெரிய பட்ஜெட் படம், நிறைய ஆர்ட்டிஸ், நிறைய லொக்கேஷன், அதனால் குறிப்பிட்ட காலத்துக்குள் முடிப்பது கஷ்டம். எப்போது முடியும் என்று இப்போது எதுவும் சொல்ல முடியவயில்லை. எனக்கு பிடித்த கதையாக இருந்தால் எனக்காக காத்திருக்க முடியுமா என்று கேட்கிறேன். முடிவும் என்று சொன்னவர்களுக்கு சம்மதம் தெரிவித்திருக்கிறேன். அந்த வகையில் புலி முடிந்ததும் 3 படங்களில் நடிக்கிறேன்.
* இந்தியில் செல்வாக்கோடு இருக்கிறீர்கள், இந்தி படங்களில் நடிக்கலாமே?
இந்திக்கு சென்று டெக்னீஷியனாக ஜெயிப்பதே பெரிய விஷயம். இதில் எங்க பாஸ் நடிக்கிறது. அடுத்து இந்தியில் எடுக்கிற படங்கள் எல்லாமே மாஸ் படங்கள். ஹீரோ 100 மாடி கட்டிடத்தில் இருந்து குதித்து எழுந்து ஓடினாலும் லாஜிக் பார்காமல் கைதட்டுவார்கள். ஒரு பாடல் காட்சி என்றால் 500 டான்சர் வேண்டும். இதை தாங்கும் ஹீரோவுக்கு சிக்ஸ் பேக் பாடி வேண்டும். சிவப்பு தேகம் வேண்டும். அழகான மொழுமொழு முகம் வேண்டும். இதுல ஏதாவது ஒண்ணு எனக்கு இருக்கா சொல்லுங்க. இந்தியில் அவ்வப்போது ஆர்ட் பிலிம்கள் வந்து ஜெயிக்கும். அப்படி ஏதாவது ஒரு படத்தில் தமிழ்நாட்டு இளைஞனாக நடிக்கிற வாய்ப்பு வந்தால் நடிக்கலாம்.
* சதுரங்க வேட்டையில் விதவிதமாக ஏமாற்றுற கேரக்டரில் நடிச்சீங்களே. நிஜ வாழ்க்கையில அப்படி யார்கிட்டேயாவது ஏமாந்திருக்கீங்களா?
என் தேவைகளை தாண்டிய பேராசை எனக்கு கிடையவே கிடையாது. அதனால் அதுபோன்ற அனுபவம் எதுவும் எனக்கு இல்லை.
* உங்கள் நடிப்பில் ரஜினி சாயல் இருப்பதாக சொல்றாங்களே?
நடிகர் திலகம் சிவாஜியின் சாயலோ, சூப்பர் ஸ்டார் ரஜினியின் சாயலோ, உலக நாயகன் கமலின் சாயலோ இல்லாமல் யாரும் இங்கு நடிக்க முடியாது. காரணம் அவர்களோட படத்தை பார்த்துதான் நடிப்பே கத்துக்கிறோம். நடிக்க ஆசைப்பட்டு சினிமாவுக்கு வருகிறோம். வெளிநாட்டுக்காரர்களை கொண்டு வந்து நடிக்க வைத்தால் அவர்கள் வேண்டுமானால் இவர்கள் சாயல் இல்லாமல் நடிக்கலாம்.
* எந்த மாதிரியான கேரக்டர்களை தேர்வு செய்கிறீர்கள்?
எனக்குன்னு ஒரு தோற்றம் இருக்கு. என்னால என்ன பண்ணமுடியும்ங்ற தெளிவு இருக்கு. கதை சொல்ல வர்றவங்களும் இந்த கேரக்டர் எனக்கு சூட்டாகும்னு முடிவு பண்ணித்தான் வர்றாங்க. அதனால எனக்கு பொருந்துகிற என்னால நடிக்க முடியும்னு நம்பிக்கை வருகிற கேரக்டரில் நடிப்பேன். இப்படித்தான் நடிப்பேன். அப்படித்தான் நடிப்பேன் என்ற எந்த விதிமுறையும் வகுத்துக் கொள்ளவில்லை.
* விஜய்யுடன் பணியாற்றும் அனுபவம் எப்படி?
அவர் மாஸ் ஹீரோ. ஹேண்ட்சம் ஹீரோ அவரை அப்படியே படம் பிடிக்கிறது ரொம்ப சிம்பிள். ஆனால் விதவிதமான காஸ்ட்யூம், விதவிதமான தோற்றத்தில் அவரை படமாக்கும்போது இந்த தோற்றத்தில், இந்த உடையில் எந்த கோணத்தில் அவரை எடுத்தால் நன்றாக இருக்கும் என்று முடிவு செய்வதுதான் சவாலான விஷயம். அதை சக்சஸ்புல்லா பண்ணியிருக்கேன். தினமும் நூற்றுக்கணக்கான ஆர்ட்டிஸ். பிரமாண்ட செட்டுகள். ராட்சத லைட்டுகள்னு... ஒவ்வோரு நாள் ஷூட்டிங்கும் திருவிழா மாதிரிதான் இருக்கும். இந்தியில் இது மாதிரி சூழ்நிலை எனக்கு பழகியிருந்ததால் எளிதாக இருந்தது.
* படம் இயக்குவீர்களா?
ஒவ்வொரு ஒளிப்பதிவாளரும் பாதி இயக்குனர் என்று சொல்வார்கள். எனக்கும் படம் இயக்கும் ஆசை இருக்கிறது. ஆனால் அதற்கான சந்தர்ப்பம் இது அல்ல. ஒளிப்பதிவாளராகவும், நடிகராகவும் கடக்க வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது. அதன் பிறகு இயக்குவது பற்றி யோசிக்கலாம்.