தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நேரம், ஜிகர்தண்டா படங்களின் வெற்றி காரணமாக அந்த படங்களில் வில்லனாக நடித்திருந்த பாபி சிம்ஹாவின் மார்க்கெட் கிடுகிடுவென்று உயர்ந்தது. அதனால் தற்போது நான்கைந்து படங்களில் அவர் ஹீரோவாக நடித்துக்கொண்டிருக்கிறார். அந்த படங்களும் பாபி சிம்ஹாவின் மார்க்கெட்டை கருத்தில் கொண்டு அதிகப்படியான பட்ஜெட்டில் தயாராகி வருகின்றன. ஆனால், நேரம் படத்தில் நடிப்பதற்கு முன்பு பாபி சிம்ஹா நாயகனாக நடித்த சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது என்ற படம் கடந்த மாதமே திரைக்கு வர தயாரானது. அதோடு அப்படத்தைப் பார்த்த பாரதிராஜா, கே.பாக்யராஜ் ஆகியோர் மிகச்சிறந்த படம் என்றும் சர்டிபிகேட் கொடுத்தனர்.
அதனால் இந்த படம் வெளிவந்தால் பாபிசிம்ஹாவின் மார்க்கெட இன்னும் எகிறிவிடும் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பாபி சிம்ஹாவை அப்படத்துக்கு டப்பிங் பேச அழைத்தபோது, தனக்கு மேற்கொண்டும் கூடுதலாக பணம் தரவேண்டும் என்கிறாராம். ஆனால், படத்தை இயக்கி தயாரித்த மருதுபாண்டியனோ, முதலில் பேசிக்கொடுங்கள். படத்தை விற்பனை செய்து விட்டு தருகிறேன் என்கிறாராம். இன்னும் அவர்களுக்கிடையே உடன்படிக்கை ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.
ஆக, என்னதான் ஹீரோவாக நடித்தபோதும் இன்னும் மனதளவில் வில்லனாகத்தான் இருக்கிறாராம் பாபி சிம்ஹா.