இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி |
பெண்களின் கடந்த காலம் சிறப்பானதாக இருந்திருக்கும் என்று எதிர்பார்ப்பதே தவறு என்று நடிகை ராதிகா ஆப்தே கூறியுள்ளார். பாலிவுட்டில், சமீபத்தில் வெளியான ஹன்டர் படத்தில், ராதிகா ஆப்தே, பல்வேறு ஆண்களுடன் உறவு கொண்டிருக்கும் வகையிலான கேரக்டரில் நடித்திருந்தார். இந்த கேரக்டர், அவரது ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், அந்த கேரக்டர் குறித்து கருத்து தெரிவித்துள்ள ராதிகா ஆப்தே கூறியதாவது, பெண்கள் மட்டுமல்ல, ஆண்களின் கடந்த கால வாழ்க்கை கசப்பு மிக்கதாகவே இருக்கும், அதை, தற்போதைய நேரத்தில் அலசி ஆராய்வது என்பது எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும். என்னைப் பொறுத்தவரை, கடந்த காலம் குறித்து நிகழ்காலத்தில் யோசிப்பதையே நான் தவறு என்றே கூறுவேன் என்று ராதிகா கூறினார்.