இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் |
கோலிவுட்டில் நீண்டகாலமாக படங்களை தயாரித்து வந்த ஏவிஎம், பிரசாத், ஜெமினி உள்ளிட்ட பல முன்னணி பட நிறுவனங்கள இப்போது படங்கள் தயாரிப்பதையே நிறுத்தி விட்டன. அதோடு சில ஆண்டுகளுக்கு முன்புவரை அவ்வப்போது முன்னணி ஹீரோக்களை வைத்து படங்கள் தயாரித்துக்கொண்டிருந்த சில கார்பரேட் நிறுவனங்களும் தயாரித்த படங்கள் எல்லாம் அதிர்ச்சி தோல்வியை கொடுத்ததால் இப்போது சினிமா பக்கமே வருவதில்லை. அதன்காரணமாக, தற்போது ஏ.ஆர்.முருகதாஸ், வெற்றி மாறன் உள்பட பல டைரக்டர்கள் தயாரிப்பாளர்களாகி வட்டனர். அதேபோல் விஷால், ஆர்யா, தனுஷ், விஜயசேதுபதி உள்பட சில நடிகர்களும் தயாரிப்பாளர்களாகியிருக்கின்றனர். சிலர் தாங்கள் நடிக்கிற படங்கள் மட்டுமே தயாரித்தபோது சிலர் மற்ற நடிகர்களையும் தங்கள் கம்பெனி படத்ல் நடிக்க வைத்து வருகின்றனர்.
இதில் தனுஷ் முன்னோடியாக இருக்கிறார். தனது தயாரிப்பில் தானும் நடித்துக்கொண்டு சிவகார்த்திகேயன், விஜயசேதுபதி போன்ற நடிகர்களையும் நடிக்க வைத்து வருகிறார். அதோடு காக்கா முட்டை படத்தைகூட வெற்றிமாறனுடன் இணைந்து தயாரித்தார். மேலும் அடுத்தபடியாகவும் தொடர்ச்சியாக படங்களை தயாரிக்க கதைகளும் கேட்டு வைத்திருக்கிறார். இதனால், தற்போது கோலிவுட்டில் வளர்ந்து கொண்டிருக்கும் சில நடிகைகள் தனுஷை அணுகி அவரது வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்க சான்ஸ் கேட்டு வருகின்றனர். அவர்களில் அட்டகத்தி நந்திதா, ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரீதிவ்யா ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்களாம்.