வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் |
பட்டாளம், எப்படி மனசுக்குள் வந்தாய், சுண்டாட்டம், பொங்கி எழு மனோகரா என சில படங்களில் நடித்தவர் இர்பான். தற்போது ரு என்ற படத்தில் நடித்துள்ளார். ஆனபோதும் சின்னத்திரையில் அவர் நடித்த கனா காணும் காலங்கள், சரவணன் மீனாட்சி உள்ளிட்ட சில தொடர்கள்தான் அவரை மக்கள் மத்தியில் கொண்டு போய் சேர்த்தன. இருப்பினும் தற்போது அவருக்கு சினிமாவில் நடிப்பதே முழு நோக்கமாகி விட்டதோடு, வெறும் காதல் சம்பந்தப்பட்ட கதைகளில் மட்டுமில்லாமல் ஆக்சன் ஹீரோ கதைகளில் நடிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில், ரு படம் அவரது ஆக்சன் பயணத்துக்கு பிள்ளையார் சுழி போட்டிருக்கிறது. அதோடு, இந்த டைட்டிலே வித்தியாசமாக இருப்பதால் இந்த படத்திற்கு பிறகு இர்பானின் சினிமா மார்க்கெட் சூடு பிடிக்கலாம் என்கிற எதிர்பார்ப்புகளும் ஏற்பட்டிருக்கிறது. அதனால் இதுவரை இர்பானை கண்டுகொள்ளாமல் இருந்த கோடம்பாக்க டைரக்டர்கள் இப்போது அவரிடம் கதை சொல்வதற்காக படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.