தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
1989-ல் பூமனம் என்ற படத்துக்கு இசையமைக்கத் தொடங்கிய வித்யாசாகர், அதையடுத்து நிலாப்பெண்ணே படத்துக்கு இசையமைத்தவர், பின்னர் தெலுங்குக்கு சென்று விட்டார். பல ஆண்டுகளுக்குப்பிறகு அர்ஜூன் நடித்த ஜெய்ஹிந்த், கர்ணா படங்களுக்கு சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து தமிழில் பேசப்படும் இசையமைப்பாளரானார்.
அதன்பிறகு பாரதிராஜாவின் பசும்பொன் உள்பட பல படங்களுக்கு இசையமைத்து வந்தவர் ரஜினி நடித்த சந்திரமுகியில் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்தார். கடைசியாக, தமிழில் விமல் நடித்த ஜன்னல் ஓரம் படத்துக்கு இசையமைத்த வித்யாசாகர், தற்போது வடிவேலு நடிக்கும் எலி படத்துக்கு இசையமைத்திருக்கிறார்.
இந்த படத்துக்கு மெலோடி பாடல்களே வேண்டும் என்பதால் லேட்டஸ்ட் இசையமைப்பாளர் யாரும் வேண்டாம் என்று முடிவெடுத்த வடிவேலு, வித்யாசாகரை அழைத்து தன் விருப்பத்திற்கேற்றபடி பாடல்களை கேட்டு வாங்கியிருக்கிறார். இதற்கு முன்பெல்லாம் பாடல்கள் விசயத்தில் தலையிடாமல் இருந்த வடிவேலு, இந்த படத்தைப்பொறுத்தவரை கதை விவாதம் நடந்தபோதே கம்போசிங்கிலும் கலந்து கொண்டு, ஏராளமான டியூன்களை போட வைத்து அதிலிருந்து தனக்கு பிடித்தமான டியூன்களை செலக்ட் பண்ணியிருக்கிறாராம்.