'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஒரு ஆண்டுக்கு முன்பு நாயகனாக நடித்து படத்தை இயக்கினார் அமீர். இந்த படத்துக்கு பேரன்பு கொண்ட பெரியோர்களே என்று தலைப்பு வைத்தார். படப்பிடிப்பு பெரிய குளத்தில் தொடங்கியது. பத்து நாட்கள் மட்டும் ஷூட்டிங் போனது. சில காரணங்களால் படப்பிடிப்பு நின்று விட்டது. பிறகு படப்பிடிப்பு தொடரவே இல்லை. இதை வைத்து அமீர் படம் பிளாக்காகி விட்டது என்று செய்திகள் வெளியாயின. இந்நிலையில் புலி பதுங்கியிருந்து பாயும் என்பதை போல நிறுத்தி வைத்த படப்பிடிப்பை மீண்டும் தொடங்குகிறார் அமீர். அடுத்த மாதம் ஐந்தாம் தேதி பேரன்பு கொண்ட பெரியோர்களே படப்பிடிப்பு சென்னையில் தொடங்குகிறது. இதில் நாட்கள் மட்டும் தான் இடைவெளி ஆனதே தவிர மற்ற எதும் மாற்றம் ஆகவில்லை. ஜெயிக்கணும் என்கிற வெறியில் படத்தை தொடர்கிறார் அமீர் என்பது குறிப்பிடத்தக்கது.