ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மலையாளத்தில் சில வருடங்களுக்கு முன்பு 'பாஸஞ்சர்' என்கிற படம் வெளியானது. தினசரி ரயில் பயணத்தின்போது தான் சந்திக்கும் யாரோ ஒருவருக்கு ஆபத்து என்றதும் தனது உயிரையும் பொருட்படுத்தாது அவரை காப்பாற்ற கிளம்பும் ஒரு பயணியும், அவருக்கு துணையாக வரும் ஒரு டாக்ஸி ட்ரைவரையும் வைத்து மனித நேயத்தின் உச்சத்தை படமாக இயக்கியிருந்தார் இயக்குனர் ரஞ்சித் சங்கர்.
அந்தப்படத்தில் திலீப் தான் கதாநாயகன் என்றாலும் அவரைவிட அதிக காட்சிகளில் படம் முழுக்க வந்த சீனிவாசனும், நெடுமுடி வேணுவும் ரசிகர்களை தங்களது நடிப்பால் வெகுவாக கவர்ந்தார்கள். அப்போதே அனைவரின் பாராட்டையும் அள்ளிய இயக்குனர் ரஞ்சித் சங்கர், கடந்த வருடம் மம்முட்டியை வைத்து இயக்கிய 'வர்ஷம்' படமும் அவரின் வித்தியாசமான சிந்தனையை வெளிப்படுத்தியது.