'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
முன்னாள் கதாநாயகியான மேனகாவின் மகளான கீர்த்தி சுரேஷ் தற்போது மலையாளத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார்.
தற்போது சிவகார்த்திகேயனுடன் 'ரஜினி முருகன்', விக்ரம் பிரபுவுடன் 'இது என்ன மாயம்', பாபி சிம்ஹாவுடன் 'பாம்பு சட்டை' என 3 படங்களில் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ்!
தமிழில் கதாநாயகி பஞ்சம் தலவிரித்தாடும் சூழலில் அடுத்து முதல்வரிசை கதாநாயகி ஆகும் வாய்ப்பு கீர்த்தி சுரேஷுக்கு உள்ளது.
அதற்கான அறிகுறியாக பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு அவரைத் தேடி வருகிறது.
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் இன்னும் ஒரு படம் கூட வெளியாகவில்லை.
இந்நிலையில், ஜீவா நடிக்கும் 'கவலை வேண்டாம்' படத்தில் நடிக்கவும் கீர்த்திக்கு அழைப்பு வந்துள்ளது.
'யாமிருக்க பயமே' படப் புகழ் டீகே இயக்கும் 'கவலை வேண்டாம்' படத்தில் ஜீவாவுடன் பாபி சிம்ஹா, இன்னொரு ஹீரோவாக நடிக்கிறார்.
இப்படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடிக்கத்தான் கீர்த்திக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்கள்!
அதனாலோ என்னவோ இப்படத்தில் நடிப்பது குறித்து கீர்த்தி இன்னும் முடிவு செய்யவில்லையாம்!
ஜீவா நடித்த 'யான்' படம் உட்பட பல படங்கள் வரிசையாக தோல்வியடைந்திருப்பதால் அவருக்கு ஜோடியாக நடிப்பதை ரிஸ்க் என்று நினைக்கிறாராம்.