இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
இந்திய வர்த்த தொழில் கூட்டமைப்பின் கூட்டம் இரு தினங்களுக்கு முன் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் திரைப்படங்களுக்கான தணிக்கை முறை பற்றி விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் கமல்ஹாசன், ஆமீர்கான் உள்ளிட்ட பல திரையுலகினர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய ஆமீர்கான், 'விஸ்வரூபம்' பட வெளியீட்டில் பிரச்சனை ஏற்பட்ட போது கமல்ஹாசனுக்கு ஆதரவாக செயல்பட முடியாமல் போனதற்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், “விஸ்வரூபம் பட வெளியீட்டுப் பிரச்சனையின் போது கமல்ஹாசனுக்கு ஆதரவாக அப்போது நான் இருக்க முடியாத நிலை குறித்து வெட்கப்படுகிறேன். அந்த சமயத்தில் அவருடன் இணைந்து நான் செயல்பட்டிருக்க வேண்டும். நான் உங்களிடம் அனைவர் முன்னிலையிலும் அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அப்போது நாங்கள் உங்களுடன் இல்லாதது குறித்து நினைத்து வருத்தப்படுகிறேன். ஒரு படத்தைத் தடை செய்வது சரியல்ல. ஒரு படம் சான்றிதழ் பெற்றதும் அந்தப் படத்தை மக்கள் எந்த இடைஞ்சலும் இல்லாமல் பார்க்கும் நிலையை உருவாக்குவது அந்த மாநிலத்தின் பொறுப்பாகும்,” என்று ஆமிர் கான் பேசினார்.
ஆமீர்கானின் பேச்சை முன் வரிசையிலிருந்து கேட்டுக் கொண்டிருந்த கமல்ஹாசன் அதை ஆமோதிக்கும் வகையில் தலையை அசைத்து ஏற்றுக் கொண்டார்.