டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே -என்ற பாடலை ஆட்டோகிராப் படத்துக்காக எழுதி தேசிய விருது பெற்றவர் பா.விஜய். கோலிவுட்டின் வித்தகக் கவிஞர் என்று அழைக்கப்பட்டு வரும் அவர், ஞாபகங்கள், இளைஞன் ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்தார். ஆனால் இரண்டு படங்களுமே ஓடவில்லை. இருப்பினும், ஹீரோவாக நடிப்பதை அவர் விடவில்லை. அதையடுத்து தகடு தகடு என்றொரு படத்திலும் நடித்தார். ஆனால் அந்த படம் எப்போதோ முடிந்து வியாபாரத்துக்கு வந்தபோதும், இன்னமும் விலைபோகவில்லை. அதனால் தொடர்ந்து விநியோகஸ்தர்களுக்கு ஷோ போட்டு காண்பித்துக்கொண்டேயிருக்கிறார்கள்.
இந்தநிலையில், ஆரம்பத்தில் தகடு தகடு படத்தின் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்த பா.விஜய் இப்போது வியாபாரம் ஆகாமல் இருப்பதால் இந்த படத்தை நம்பிக்கொண்டிருக்க வேண்டாம் என்று ஒரு படத்தை தானே இயக்கி நடித்துக்கொண்டிருக்கிறாராம். ஆனால், இப்போதைக்கு அந்த விசயம் வெளியில் தெரிய வேண்டாம் என்பதால் எந்த செய்தியையும வெளியிடாமல் சீக்ரெட்டாக படப்பிடிப்பு நடத்திக்கொண்டிருக்கிறாராம் அவர்.