‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
பிரபுசாலமன் கயல் படத்தை எடுக்கும் போது மைனா அமலாபால் மாதிரி ஒரு நாயகியை மனதில் வைத்து நாயகி வேட்டை நடத்திய போது அதில் சிக்கியவர் தான் ஆனந்தி. மூக்கு முழியுமாக பக்காவான கிராமிய சாயலில் தோற்றம் உடைய இவர், கயல் படத்தை பெரிய அளவில் நம்பினார். நம்பிக்கை கலைந்தது. இந்நிலையில் அடுத்து திரைக்கு வர உள்ள சண்டிவீரனை பெரிய அளவில் நம்பி இருக்கிறார். இந்த படம் ஆனந்திக்கும் அதர்வாவுக்கும் பிரேக் கொடுக்கும் என்கிறார் சண்டிவீரன் இயக்குனர் சற்குணம். நிலைமை இப்படியிருக்க, ஆனந்திக்கு மானேஜர் வேலைபார்க்கும் நபர் இவர் பெயரை சொல்லி அதிகம் லாபம் பார்த்துள்ளார். இந்த உண்மையை புரிந்துக் கொண்ட ஆனந்தி அவரை நீக்கி விட்டு எனக்கு தமிழ் நன்றாக பேசத் தெரியும் நானே பேமண்ட் பற்றி பேசி கொள்கிறேன் என்று தன்னிச்சையான முடிவை எடுத்துள்ளார். இவரைப் போலவே ஏற்கனவே இனியா இந்த முடிவை எடுத்திருந்தார். நல்லவாயன் சம்பாதிக்க நாரவாயன் தின்ன கதையாம்.