மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
பார்த்திபன் இயக்கி நாயகனாக நடித்த முதல் படம் புதிய பாதை. அந்த படம் சூப்பர் ஹிட்டானதால் அதன்பிறகு பொண்டாட்டி தேவை, தாலாட்டு பாடவா, தையல்காரன், சுகமான சுமைகள், உள்ளே வெளியே, புள்ளக்குட்டிக்காரன், ஹவுஸ்புல், வித்தகன் என பல படங்களை இயக்கி நடித்தார் பார்த்திபன். அதன்பிறகு மற்ற இயக்குனர்களின் படங்களில் நடிக்கத் தொடங்கிய அவர், கதை திரைக்கதை இயக்கம் படத்தில் வெறும் இயக்குனராக மட்டுமே செயல்பட்டவர், அடுத்து கதை இருக்கு என்ற படத்தையும் முழுக்க முழுக்க மற்றவர்களைக்கொண்டே இயக்க தயாராகிக்கொண்டிருக்கிறார். ஆனால், இப்போது இயக்குனராக மட்டுமே செயல்படும் பார்த்திபன், தனது முதல் படமான புதிய பாதையிலும் தான் இயக்குனராக மட்டும்தான் செயல்பட இருந்தாராம். அந்த படத்தில் நடிப்பதற்காக தற்போது கமலின் உத்தமவில்லன் படத்தை இயக்கியுள்ள நடிகர் ரமேஷ்அரவிந்திடம்தான் கால்சீட் கேட்டிருந்தாராம். ஆனால், அப்போது மனதில் உறுதி வேண்டும், கேளடி கண்மணி என ரமேஷ்அரவிந்த் வேகமாக வளர்ந்து கொண்டிருந்த நேரம் என்பதால் அவர் கேட்ட சம்பளம், பார்த்திபன் போட்டு வைத்திருந்த பட்ஜெட்டை எகிறி சென்றதாம். அதன்காரணமாகத்தான் புதிய பாதையில் தானே ஹீரோவாகியிருக்கிறார் பார்த்திபன். உத்தமவில்லன் படத்தின் ஆடியோ விழாவை தொகுத்து வழங்கியபோது, ரமேஷ்அரவிந்த் முன்னிலையில் இந்த தகவலை பகிர்ந்து கொண்டார் பார்த்திபன்.