டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ஏ.ஐ.பி,.ரோஸ்ட் நிகழ்ச்சி தொடர்பாக, பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவை, வரும் 16ம் தேதி வரை கைது செய்வதிலிருந்து இடைக்காலத்தடை விதித்து, மும்பை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
மும்பையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஏ.ஐ.பி.ரோஸ்ட் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியில், அனைவரின் முன்பு, தீபிகாவை கட்டியணைத்து, ரன்வீர் சிங் முத்தமி்ட்டார். இதற்கு, தீபிகா படுகோனேவும், எவ்வித மறுப்பும் தெரிவிக்காமல், ரன்வீர் சிங்கிற்கு ஒத்துழைப்பு தந்தார். பார்வையாளர்கள் பகுதியில் அமர்ந்திருந்த, சோனாக்ஷி சின்கா உள்ளிட்ட பலர் இதற்கு ஆதரவு தெரிவித்து கரகோஷம் எழுப்பியபடி இருந்தனர்.
ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்ட பொதுநிகழ்ச்சியில், இவ்வாறு அவர்கள் நடந்துகொண்டது மிகவும் கண்டிக்கத்தக்கது என்று கூறி, முன்னணி வக்கீல் ஒருவர், கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதனையடுத்து, ரன்வீர்சிங், தீபிகா படுகோனே, அர்ஜூன் கபூர், சோனாக்ஷி சின்கா உள்ளிட்டோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய மும்பை ஐகோர்ட் உத்தரவிட்டது.