அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி |
யான் படத்தின் படு தோல்வியானால் நடிகர் ஜீவாவுக்கு வேறு எந்த படமும் கமிட் ஆகவில்லை. அந்தப் படத்தை தயாரித்த வகையில் 15 கோடிக்கு மேல் நஷ்டப்பட்ட ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனம் தங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்துக்கு ஜீவாவும் ஒரு காரணம் என குற்றம்சாட்டியது. இந்நிலையில் பொதுவான நண்பர் எடுத்த சமரச முயற்சி காரணமாக ஜீவாவும், ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பாளர் எல்ரெட் குமாரும் சந்தித்து பேசினர்.
இரண்டு தரப்பினரும் தங்களின் மன வருத்தங்களை பகிர்ந்து கொண்டனர். பின்னார், யான் நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில் ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனத்துக்கு சம்பளம் வாங்காமல் ஒரு படத்தில் நடித்துத் தருவதாக வாக்குறுதி கொடுத்தார் ஜீவா. அதன்படி புதிய படத்தைத் தொடங்கிவிட்டனர்.
ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் டீகே இயக்கி கடந்த 2014ஆம் ஆண்டு வெளிவந்து வெற்றிபெற்ற படம் யாமிருக்க பயமே. டீகே இயக்கத்தில் நாயகனாக நடிக்கிறார் ஜீவா. கவலை வேண்டாம் என பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தின் இதர நட்சத்திரங்கள், டெக்னீஷியன்களின் தேர்வு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுதவிர ராம்நாத் இயக்கத்திலும் புதிய படமொன்றில் நடிக்கவிருக்கிறார் ஜீவா. அவரது புரடக்ஷன் மானேஜர் பெயரில் ஆர்.பி. சௌத்ரி தயாரிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீதிவ்யா நடிக்கிறார். ஆக.. சும்மா இருந்த ஜீவா தற்போது இரண்டு படங்களில் நடிக்கிறார்.