'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சண்டமாருதம் படத்துக்கு பிறகு சரத்குமார், நடிப்பில் பிசியாகி விட்டார். அடுத்து அவர் மிஷ்கின் இயக்கும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். இதன் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்குகிறது. இது ஒரு ஆக்ஷன் த்ரில்லர் கதை. சரத்குமார் உளவுப்பிரிவு அதிகாரியாக நடிக்கிறார். அவருடன் புதுமுக ஹீரோ ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். அதன்பிறகு ஏ.வெங்கடேஷ் இயக்கும் ஏய் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கிறார். இதற்காக ஸ்கிரிப்ட் உருவாக்கும் பணியில் வெங்கடேஷ் தீவிரமாக இருக்கிறார்.
சமுத்திரகனி தற்போது இயக்கி வரும் கிட்ணா படத்திற்கு பிறகு சரத்குமார் நடிக்கும் படத்தை இயக்குகிறார். இதனை சரத்குமாரே தயாரிக்கிறார். இதுதவிர கே.ஆர்.செல்வராஜ் இயக்கும் விடியல் படமும், வேளச்சேரி படமும் வெளிவர வேண்டியது இருக்கிறது. மலையாள ரீமேக் படம் ஒன்றில் நடிக்கவும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இவைகள் தவிர ஒரு தெலுங்கு படத்திலும், ஒரு மலையாளப் படத்திலும் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். 2015ம் ஆண்டு சரத்குமாருக்கு பிசியான ஆண்டாகவே இருக்கிறது.