பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
நடிகர் அருண்பாண்டியன் தயாரிக்கும் படம் சவாலே சமாளி. கழுகு, சிவப்பு படங்களை இயக்கிய சத்யசிவா இயக்குகிறார். அசோக் ஷெல்வன், பிந்து மாதவி, கருணாஸ், ஊர்வசி நடிக்கிறார்கள். செல்வகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். தமன் இசை அமைக்கிறார்.
படத்தை பற்றி சத்ய சிவா இப்படிக் கூறுகிறார், "கழுகு படத்தில் கொடைக்கானல் மலையில் தற்கொலை செய்து கொண்டவர்களின் பிணங்களை மீட்கும் ஒரு சமூக மக்களின் வாழ்க்கையை சொன்னேன். சிகப்பு படத்தில் இலங்கை தமிழ் அகதிகள் தமிழ் நாட்டில் அனுபவிக்கும் சோகத்தை சொன்னேன். மூன்றாவது படத்தை ரொம்ப ஜாலியாக இயக்க வேண்டும் என்று அந்த கதையை அருண் பாண்டியன் சாரிடம் சொன்னதும் தயாரிக்க முன் வந்தார். இது ஏ டூ இசட் காமெடி படம். சீரியசான எந்த விஷயமும் கிடையாது.
அசோக் ஷெல்வனும், நண்டு ஜெகனும் ஒரு டி.வி.சேனலில் வேலை செய்கிறார்கள். அது ஒரு உப்புமா சேனல். மொக்கை நிகழ்ச்சியாக ஒளிபரப்பி டிஆர்பி ரேட்டிங்கில் கடைசியில் இருக்கும். இதனால் நஷ்டமடையும் சேனல் முதலாளி கருணாஸ் தற்கொலை முயற்சி வரைக்கும் போவார். அப்போது அசோக் ஷெல்வனும், ஜெகனும் சேர்ந்து புதுப்புது யோசனைகளுடன் புது புது நிகழ்ச்சிகளை நடத்துவார்கள். அது அதிரிபுதிரி ஹிட் அடிக்க சேனல் முதல் இடத்துக்கு வந்துவிடும். ஆனால் புது நிகழ்ச்சிகளுக்கு செய்த சில வேலைகளால் அசோக்கும், ஜெகனும் இடியாப்ப சிக்கலுக்குள் மாட்டிக் கொள்வார்கள். அது என்ன சிக்கல், அதிலிருந்து எப்படி மீண்டார்கள் என்பதுதான் கதை'' என்றார்.