மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் |
விழா படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் மாளவிகா மேனன். தற்போது வெத்து வேட்டு படத்தில் நடித்து வருகிறார். ஹரீஷ் ஹீரோவாக நடிக்கிறார். இளவரசு, கஞ்சா கருப்பு, ஆடுகளம் நரேன், மீரா கிருஷ்ணன், சுஜாதா நடிக்கிறார்கள். மணிபாரதி இயக்கி உள்ளார். மாளவிகா மேனன் படத்தின் டைட்டிலை மாற்றச் சொல்லி அடம்பிடித்திருக்கிறார்.
இதுபற்றி இயக்குனர் மணிபாரதி கூறியதாவது: படத்தின் டைட்டில், கதை எல்லாவற்றையும் முழுமையாக அவரிடம் சொல்லி ஓகே வாங்கித்தான் ஒப்பந்தம் போட்டோம். ஆனால் படப்பிடிப்பின் போது பல பிரச்னைகளை எழுப்பினார். ஒரு முறை பம்பு செட்டில் அவர் குளிப்பது போன்ற காட்சி எடுத்துபோது அதில் நடிக்க மறுத்தார். என்னை ஆபாசமாக காட்டிவிடுவீர்கள் என்றார். பல முன்னணி நடிகைகள் இந்த காட்சியில் நடித்திருக்கிறார்கள். என்று வீடியோ போட்டு காட்டிய பிறகு நடித்துக் கொடுத்தார். ஹீரோவும், அவரும் ஒரு தோடத்தில் ஒரே போர்வைக்குள் இருப்பது போன்ற காட்சியிலும் நடிக்க மறுத்தார். இது ஒரு கனவு காட்சிதான் பேசிக் கொண்டிருப்பது போன்ற காட்சிதான் என்று விளக்கம் சொல்லி நடிக்க வைத்தோம்.
ஒரு நாள் வந்து டைட்டிலை மாற்றுங்க என்றார். ஏன் என்று கேட்டேன். "எங்க குடும்ப ஜோதிடர் இப்போது உன்னை எல்லோரும் விழா மாளவிகா என்ற குறிப்பிடுகிறார்கள். அது மங்களகரமாக இருக்கிறது. இந்தப் படத்துக்கு பிறகு உன்னை வெத்துவேட்டு மாளவிகா என்று கூறுவார்கள். வெத்து வேட்டு என்பது தமிழில் கெட்ட வார்த்தை" என்று ஜோதிடர் சொன்னதாக சொன்னார். அதன் பிறகு அவரிடம் வேலை செய்யாமல உடான்ஸ் விட்டு திரியுற ஆம்பள பசங்களத்தான் அப்படிச் சொல்வாங்க பெண்களை சொல்ல மாட்டாங்கன்னு விளக்கம் கொடுக்க வேண்டியதாப்போச்சு. இப்படி சின்ன பிரச்னைகள் இருந்தாலும் கேமராவுக்கு முன்னால் வந்தால் நடிப்பில் பின்னி எடுத்து விடுவார் மாளவிகா. அவருக்கு இந்தப் படம் நல்ல பெயரைக் கொடுக்கும் என்றார் இயக்குனர் மணிபாரதி.