டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர் ராஜ்கிரண். தற்போது இவர் ''குட்டிபுலி'' இயக்குநர் முத்தையா இயக்கி இருக்கும் ''கொம்பன்'' படத்தில் நடித்துள்ளார் கார்த்தி, லட்சுமி மேனன் நடித்துள்ள இப்படத்தில் ராஜ்கிரண், கார்த்தியின் மாமனராக நடித்துள்ளார். இப்படம் அடுத்த மாதம் வௌியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் ஆடியோ வௌியீட்டு விழா சென்னையில் நடந்தது. அதன்பின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடந்தது. அப்போது இன்றைய சினிமாவின் நிலையை பற்றி விரிவாக விவரித்தார் ராஜ்கிரண்.
அவர் பேசியதிலிருந்து... சினிமாவில் கிடைக்கின்ற லாபத்தை ஒவ்வொருத்தரும் பங்கிட்டு கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அன்றைக்கு இருந்தது. ஆனால் இன்றைக்கு அப்படியில்லை. முடிந்தவரை அடுத்தவனை ஏய்த்து எப்படி சம்பாதிக்கலாம் என்ற நிலை தான் சென்று கொண்டு இருக்கிறது. எப்படி படம் எடுக்கலாம், இந்த நடிகருக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கலாம், அந்த நடிகைக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கலாம் என ஒரு தயாரிப்பாளருக்கு தெரியும். ஒரு படத்தை ரூ.1 கோடிக்கு எடுத்தால், அதை ரூ.1 கோடியே 10 லட்சத்திற்கு விற்றால், 10 லட்சம் லாபம் பார்க்கலாம். சினிமாவை ஒரு வியாபாரமாக அணுக வேண்டும், ஆனால் இன்று அப்படி யாரும் அணுகவில்லை.
ஒரு 30-40 வருடங்களுக்கு முன்னர் சினிமாவில் 50 சதவீதம் நல்லவர்கள் இருந்தார்கள், 50 சதவீதம் பேர் கெட்டவர்கள் இருந்தார்கள். ஆனால் இன்றைக்கு 90 சதவீதம் கெட்டவர்களாக இருக்கிறார்கள். சினிமாவில் மட்டுமல்ல ஒட்டுமொத்த சமுதாயமே அப்படி தான் சென்று கொண்டிருக்கிறது. நாளை இது 99 சதவீதமாக கூட மாறினாலும் மாறும். ஒரு படம் லாபம் தரலாம், நஷ்டமும் தரலாம். அதை ஏற்று கொள்ள வேண்டும். சினிமா வியாபாரத்தில் விட்டு கொடுக்கும் மனப்பாங்கு வேண்டும்.
இன்றைக்கு ஒரு படம் இயக்கி அந்தப்படம் ஹிட்டாகிவிட்டால் நான் தான் பெரிய இயக்குநர் என்று ஆட்டம் போடுகின்றனர். இயக்குநர் என்பவர் சாதாரணமானவர் அல்ல. ஆதி முதல் அந்தம் வரை அனைத்தும் தெரிந்து இருக்க வேண்டும், அதில் அனுபவம் வாய்ந்தவராக இருக்க வேண்டும். அப்படியிருந்தால் தான் அவர் ஒரு முழுமையான இயக்குநராக இருப்பார். ஆனால் இப்போது அப்படி இல்லை. ஏதோ வந்தோம், யாரையாவது பிடித்து எப்படியோ ஒரு படம் பண்ணினோம் என்று சென்று கொண்டிருக்கின்றனர். சினமாவில், இப்போது தொழில் தர்மம் துளியும் இல்லை. அதனால் தான் சினிமா, இன்று சீரழிவு பாதைக்கு சென்று கொண்டு இருக்கிறது.
இவ்வாறு ராஜ்கிரண் கூறினார்.