தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கார்த்தி, ராஜ்கிரண், லட்சுமி மேனன், கோவை சரளா, தம்பி ராமையா, கருணாஸ் மற்றும் பலர் நடிக்கும் 'கொம்பன்' படத்தின் இசை வெளியீடு இன்று நடைபெற்றது. அதைத் தொடர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பும் நடந்தது. இந்தப் படத்தை முத்தையா இயக்கியுள்ளார். சசிகுமார், லட்சுமி மேனன் நடித்த 'குட்டிப் புலி' படத்திற்குப் பிறகு முத்தையா இயக்கியுள்ள படம் இது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய முத்தையா, “இந்தப் படம் எங்களுடைய குடும்பத்தில் நடந்த ஒரு கதைதான். என்னுடைய அப்பாவுக்கும், அவருடைய மாமனாருக்கும் இடையே நடந்த விஷயங்களைத்தான் படமாக்கியிருக்கிறேன். சிறு வயதிலிருந்தே அவர்களைப் பார்த்து வந்ததால் பெரும்பாலும் உண்மைச் சம்பவங்களைத்தான் படத்தில் வைத்திருக்கிறேன்.
பத்து வருடங்களுக்கு முன்பே இந்தக் கதையில் ராஜ்கிரண் நடித்த கதாபாத்திரத்தில் சத்யராஜை நடிக்க வைத்து படமாக எடுக்கும் வாய்ப்பு கூட எனக்கு வந்தது. ஆனால், அந்த மாமனார் 'முத்தையா' கதாபாத்திரத்தில் ராஜ்கிரண்தான் நடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். 'என் ராசாவின் மனசிலே' படத்தைப் பார்த்ததுமே என்னுடைய 'முத்தையா' கதாபாத்திரத்திற்கு அவர்தான் பொருத்தமாக இருப்பார் என்று முடிவு செய்து விட்டேன். அவருக்காகவே காத்திருந்து இந்தப் படத்தை எடுத்திருக்கிறேன். ஆனால், இந்தப் படத்திற்கு முன் 'குட்டிப் புலி' படத்தை இயக்கி விட்டேன்.
நான் இயக்கும் படங்கள் அனைத்துமே குடும்ப உறவுகளைச் சொல்லும் படமாகவே இருக்கும். எனக்குத் தெரிந்தவற்றை மட்டுமே நான் எடுப்பேன். தெரியாத தொழிலைத் தொட்டவனும் கெட்டான், தெரிந்த தொழிலை விட்டவனும் கெட்டான், என கிராமத்தில் சொலவடை உண்டு. எனக்கு சிட்டி சப்ஜெக்ட் பழக்கமில்லை, கிராமத்துப் பின்னணியில்தான் படங்களை இயக்குவேன்,” என்று உறுதியுடன் சொன்னார் முத்தையா.