டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தமிழ்த் திரையுலகில் மிக முக்கியமான பட நிறுவனமாக விளங்கியது தேவர் பிலிம்ஸ் நிறுவனம். மிருகங்களை முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க வைத்த நிறுவனமாகத்தான் பலருக்கு அவர்களைப் பற்றித் தெரியும். அந்த நிறுவனத்திற்கென்று தனிப்பட்ட கதை இலாகா ஒன்று உண்டு. அந்தக் காலத்தில் அவர்கள்தான் ஒரு படத்திற்கென்று கதைகளை உருவாக்குவார்கள். படத்தை இயக்க வரும் இயக்குனர்களும் தயாரிப்பாளரிடமும், அந்த கதை இலாகாவிடமும்தான் கதை சொல்ல வேண்டும். அதன் பிறகு அந்தக் கதையை மெருகேற்றி படமாகத் தயாரிப்பார்கள்.
பாக்யராஜ், பாரதிராஜாவிடம் உதவியாளராகச் சேர்வதற்கு முன் தூயவன் அவர்களிடமும் உதவியாளராக இருந்தவர். ஒரு முறை தேவர் பிலிம்ஸ்-ல் கதை சொல்வதற்காக பாக்யராஜ் சென்றாராம். அவர்களிடம் கதை சொல்ல வேண்டுமென்றால் மூன்று நிபந்தனைகளை விதிப்பார்களாம். ஒன்று கதையில் கடவுள் பக்தி இருக்க வேண்டும், இரண்டு பெண்கள் சென்டிமென்ட் இருக்க வேண்டும், மூன்று அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு இருக்க வேண்டும், இதுதான் அந்த மூன்று நிபந்தனைகள்.
அவற்றைக் கேட்ட பாக்யராஜ், ஒரே வரியில் அந்த மூன்று நிபந்தனைகளும் இருக்கும்படியாக ஒரு கதையை சொன்னாராம். அது என்ன தெரியுமா...“ஐயோ கடவுளே...என்னை கற்பழிச்சது யாரோ...” என்பதுதான் அந்தக் கதையாம். இதில் 'கடவுளே' என்பதில் கடவுள் பக்தி இருக்கிறது, 'கற்பழிப்பு' என்பதில் பெண்கள் சென்டிமென்ட் இருக்கிறது, 'யாரோ' என்பதில் அடுத்து என்ன என்பதும் இருக்கிறது. இப்போது சொல்லுங்கள் பாக்யராஜ், ஒரு திரைக்கதை மன்னன்தானே... !