Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஒரு வரியில் கதை சொன்ன பாக்யராஜ்

05 மார், 2015 - 17:23 IST
எழுத்தின் அளவு:
Bhagyaraj-says-story-in-one-line

தமிழ்த் திரையுலகில் மிக முக்கியமான பட நிறுவனமாக விளங்கியது தேவர் பிலிம்ஸ் நிறுவனம். மிருகங்களை முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க வைத்த நிறுவனமாகத்தான் பலருக்கு அவர்களைப் பற்றித் தெரியும். அந்த நிறுவனத்திற்கென்று தனிப்பட்ட கதை இலாகா ஒன்று உண்டு. அந்தக் காலத்தில் அவர்கள்தான் ஒரு படத்திற்கென்று கதைகளை உருவாக்குவார்கள். படத்தை இயக்க வரும் இயக்குனர்களும் தயாரிப்பாளரிடமும், அந்த கதை இலாகாவிடமும்தான் கதை சொல்ல வேண்டும். அதன் பிறகு அந்தக் கதையை மெருகேற்றி படமாகத் தயாரிப்பார்கள்.


பாக்யராஜ், பாரதிராஜாவிடம் உதவியாளராகச் சேர்வதற்கு முன் தூயவன் அவர்களிடமும் உதவியாளராக இருந்தவர். ஒரு முறை தேவர் பிலிம்ஸ்-ல் கதை சொல்வதற்காக பாக்யராஜ் சென்றாராம். அவர்களிடம் கதை சொல்ல வேண்டுமென்றால் மூன்று நிபந்தனைகளை விதிப்பார்களாம். ஒன்று கதையில் கடவுள் பக்தி இருக்க வேண்டும், இரண்டு பெண்கள் சென்டிமென்ட் இருக்க வேண்டும், மூன்று அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு இருக்க வேண்டும், இதுதான் அந்த மூன்று நிபந்தனைகள்.


அவற்றைக் கேட்ட பாக்யராஜ், ஒரே வரியில் அந்த மூன்று நிபந்தனைகளும் இருக்கும்படியாக ஒரு கதையை சொன்னாராம். அது என்ன தெரியுமா...“ஐயோ கடவுளே...என்னை கற்பழிச்சது யாரோ...” என்பதுதான் அந்தக் கதையாம். இதில் 'கடவுளே' என்பதில் கடவுள் பக்தி இருக்கிறது, 'கற்பழிப்பு' என்பதில் பெண்கள் சென்டிமென்ட் இருக்கிறது, 'யாரோ' என்பதில் அடுத்து என்ன என்பதும் இருக்கிறது. இப்போது சொல்லுங்கள் பாக்யராஜ், ஒரு திரைக்கதை மன்னன்தானே... !


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in