டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
மத்திய அரசு திரைப்பட கலைஞர்களுக்கு சேவை வரி விதித்துள்ளது. ஆனால் நாடக கலைஞர்கள், கிராமிய கலைஞர்களுக்கு சேவை வரியிலிருந்து விலக்கு அளித்தது. இதையொட்டி திரைப்பட நடிகர்களுக்கும் சேவை வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரி நடிகர் சித்தார்த் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
"இயக்குனர்கள் சொல்வதை கேட்டுத்தான் நாங்கள் மேக்அப் போட்டு அவர்கள் சொல்கிறபடி நடிக்கிறோம். தொழில் முறையில் எங்களுக்கும் நாடக நடிகர்களுக்கும் பெரிய வித்தியாசமில்லை. எனவே நாடக நடிகர்கள், கிராமிய கலைஞர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது போன்று எங்களுக்கும் சேவை வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்" என்று கேட்டிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அளித்த தீர்ப்பு வருமாறு: யாருக்கு வரி விதிக்க வேண்டும், விதிக்க கூடாது என்று முடிவெடுப்பது மத்திய அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டது. கிராமிய கலைஞர்கள் லாப நோக்கம் இல்லாமல் பாரம்பரிய கலைகளை பாதுகாத்து வருகிறார்கள். அதனால் அவர்களுக்கு அரசு விரிவிலக்கு அளித்துள்ளது. கிராமிய கலைஞர்களையும், திரைப்பட கலைஞர்களையும் ஒரே விதமாக கருத முடியாது. திரைப்படங்கள் பெரும் முதலீட்டில் தயாரிக்கப்படுகிறது. நடிகர்கள் பெரும் தொகை சம்பளமாக பெறுகிறார்கள். எனவே நடிகர்கள் வரிவிலக்கு சலுகை கேட்க முடியாது. அதனால் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. என்று அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.