இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
பஹத் பாசிலின் செயல் மலையாள திரையுலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது என்றால் அது பொய்யில்லை. ஒன்றல்ல, இரண்டல்ல.. ஐந்து படங்களின் அட்வான்ஸ் தொகையை திருப்பிக்கொடுத்திருக்கிறார் இளம் முன்னணி ஹீரோ பஹத் பாசில்.. காரணம் கடந்த வருடத்தில் பஹத் பாசில் நடித்து வெளியான பல படங்கள் பாக்ஸ் ஆபீஸில் பப்படம் ஆனதுதான்.. அதில் ஒரே ஒரு படம் மட்டும் சூப்பர் டூப்பர் ஹிட் என்றால் அது 'பெங்களூர் டேய்ஸ்' மட்டும் தான். ஆனால் அதுகூட துல்கர் சல்மான், நிவின் பாலி ஆகியோருக்கும் சேர்த்து கிடைத்த கூட்டணி வெற்றி தானே..?
இந்த வருடத்தில் இதுவரை அவர் நடித்து வெளியான 'மரியம் முக்கு', 'தரம்' ஆகிய இரண்டு படங்களும் அவர் முகத்தில் சிரிப்பை வரவழைக்கவில்லை என்பதே உண்மை. சமீபத்தில் தயாரிப்பாளர் அரோமா மணி, தனது படத்தில் இருந்து பஹத் பாசில் விலகிக்கொண்டதாகவும், வாங்கிய அட்வான்ஸையும் திருப்பி தரவில்லையென்றும் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்திருந்தார்.
ஆனால் விசாரித்தபோது பஹத் பாசில், தான் தேர்ந்தெடுக்கும் படங்களில் காமா சோமாவென்று நடிக்க விரும்பாமல், தனக்கு செட்டாகாத சிலவற்றை களையெடுக்கும் விதமாகத்தான் தயாரிப்பாளர் அரோமா மணியின் படம் உட்பட ஐந்து படங்களுக்கு வாங்கிய அட்வான்ஸ் தொகையை திருப்பிக்கொடுத்துள்ளார். குறிப்பாக தனது முந்தைய தோல்விகளின் மீது அவநம்பிக்கை வைத்து, புறம் பேசி வருபவர்களின் படங்களைத்தான் ஓரங்கட்டி வருகிறாராம் பஹத் பாசில்..