டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
இயற்கையாகவே தனது மனதிற்கு சரியென்று படும் துணிச்சலான கருத்துக்களை அவ்வப்போது சூடான ஸ்டேட்மேன்ட்டுகளாக வெளியிடுபவர்தான் மலையாள நடிகையான ரீமா கல்லிங்கல். மலையாளத்தில் சூப்பர்ஹிட்டான '22 ஃபீமேல் கோட்டயம்' படத்தில் ரீமா கல்லிங்கல் தன்னை ஏமாற்றிய காதலனுக்கு 'வித்தியாசமான' தண்டனை கொடுக்கும் துணிச்சலான வேடத்தில் நடித்தபின் அவரது பேச்சில் தன்னம்பிக்கையும் உக்கிரமும் கூடிக்கொண்டுதான் இருக்கிறது.
டில்லி மாணவி பாலியல் பாலாத்காரம் செய்யப்பட்டு இறந்த வழக்கில் கைது செய்யப்பட்டு, தற்போது தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருக்கும் முகேஷ் சிங் என்பவன் சமீபத்தில் “பலாத்காரத்துக்கு ஆணை விட பெண்ணுக்கே அதிக பொறுப்பு உள்ளது. தூக்கு தண்டனை வழங்கினால், எதிர்காலத்தில் இதைவிட மோசமான பலாத்காரம் நடக்கும்" என்று பேட்டி அளித்துள்ளான். அவனின் இந்த ஆணவ பேச்சு பலரையும் போல ரீமா கல்லிங்கல்லையும் கொந்தளிக்க வைத்துள்ளது.
இது குறித்து தனது உணர்வை வெளிப்படுத்தும் விதமாக “மாணவி நிர்பயாவின் மரணத்துக்கு காரணமான அவன் இன்னும் உயிருடன் இருக்கிறான்.. பிற்பாடு அவன் இந்திய தெருக்களில் சுதந்திரமாக கூட உலாவரக்கூடும்.. பெஸ்ட் ஆப் லக் லேடீஸ்” என நமது நாட்டு சட்ட அமைப்பை பற்றி விரக்தியுடன் குறிப்பிட்டுள்ளார்..!