தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சின்னத் திரையில் வெற்றிகரமான இயக்குனராக வலம் வந்த எஸ்.என்.சக்திவேல் இயக்க, சின்னத் திரையில் பிரபலமான தொகுப்பாளராக வலம் வந்த தீபக் இருவரும் வெள்ளித் திரையில் இணையும் படம் 'இவனுக்கு தண்ணில கண்டம்'. டிவியில் பிரபலமான தொகுப்பாளராக வேலைக்குச் சேர வேண்டும் என்ற ஆசையில் ஊரிலிருந்து சென்னைக்கு ஓடி வரும் தீபக், ஒரு சிக்கலில் மாட்டிக் கொள்ள அதிலிருந்து அவர் எப்படி விடுபடுகிறார் என்பதை நகைச்சுவையாகச் சொல்லியிருக்கிறார்களாம்.
நேற்று இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. மேடையில் வைக்கப்பட்ட விளம்பர போஸ்டரில் கூட 'டார்லிங்' படத்தின் மூலம் 'டாக் ஆப் த டவுன்' ஆக மாறியுள்ள ராஜேந்திரன்தான் நாயகனைப் போல முன்னிறுத்தப்பட்டிருந்தார். ராஜேந்திரனுக்குக் கிடைத்த வரவேற்பைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்ள 'தண்ணில கண்டம்' குழுவினர் முடிவெடுத்துள்ளது தெரிகிறது.
இந்தப் படத்தில் நாயகியாக கேரளாவைச் சேர்ந்த நேகா ரத்னாகரன் அறிமுகமாகிறார். அழகாக தமிழில் பேச ஆரம்பித்தவர் ராஜேந்திரனைப் பற்றி பாராட்டித் தள்ளி விட்டார். “இதுதான் நான் நடிக்கிற முதல் படம். எனக்கு சினிமாவைப் பத்தி எதுவுமே தெரியாது. இந்தப் படத்துல ராஜேந்திரன் சார் கூட நடிக்கச் சொன்ன போது ரொம்ப பயமா இருந்தது. டைரக்டர்கிட்டயும் சார் அவர் கூடலாம் நான் நடிக்க மாட்டேன், எனக்கு பயமா இருக்கு என்றேன். அதற்கு இயக்குனர், பயப்படாதீங்க, அவர் கிட்ட நீங்க முதல்ல பேசிப் பாருங்க என்றார். அப்புறம் அவர்கிட்ட பேச்சு கொடுத்தேன். பேச ஆரம்பித்ததும்தான் தெரிஞ்சது, அவர் ஒரு குழந்தை மனசுக்காரர்னு. ஆள் பார்க்கத்தான் முரட்டுத்தனமா இருக்காரு, ஆனால், அவர் ஒரு குழந்தை மாதிரி,” என்கிறார் நேகா.
ஒரு முரட்டு ஆசாமியை இப்படி பச்சைப் புள்ளைங்களும் ரசிக்கிற மாதிரி செஞ்சிட்டாங்களே...!