கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
ஆடியோ நிறுவனங்கள் மீது இசையமைப்பாளர் இளையராஜா தொடர்ந்த வழக்கில், ஆடியோ நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட தடைக்காலை தடையை நிரந்தர தடையாக மாற்றி சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. 1000 படங்களுக்கு மேல் இசையமைத்த இளையராஜா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்று தொடர்ந்தார்.
அதில், என் இசை அமைப்பு, ஒலிப்பதிவு, பாடல்களுக்கு, முழு பதிப்புரிமையும் எனக்கு தான் உள்ளது. சினிமா பாடல்கள் மட்டும் அல்லாமல், பக்தி பாடல்களையும், ஒலிப்பதிவு செய்துள்ளேன். ரிகார்டிங் நிறுவனங்களுக்கு, அளிக்கப்பட்ட உரிமை, காலாவதியாகி விட்டது. அவற்றை புதுப்பிக்காமல், உரிமை கொண்டாட முடியாது. எனவே, என் பாடல்கள், ஒலிப்பதிவில், எனக்கு உள்ள உரிமையில் குறுக்கிட, அகி மியூசிக், எக்கோ மியூசிக் உள்ளிட்ட ரிகார்டிங் நிறுவனங்களுக்கு, தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த இடைக்கால தடை விதித்து கோர்ட் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த சம்பந்தப்பட்ட மியூசிக் நிறுவனங்களுக்கு நிரந்தரமாகவே தடை விதித்து நீதிபதி சுப்பையா உத்தரவிட்டுள்ளார்.