'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நடிகர், கதாசிரியர், இயக்குனர் என பன்மொழி திறமைகளை கொண்டவர் பிரபல மலையாள நடிகர் சீனிவாசன். நடிகர் என்றால் அதில் காமெடி, குணச்சித்திரம், வில்லன் என வெரைட்டி காட்டுபவர். தமிழில் 'லேசா லேசா' என்கிற ஒரே படத்தில் மட்டும் ஷாம் வீட்டு வேலையாளாக லேசாக தலைகாட்டியதோடு சரி.. நடிப்பு போக இவருக்கு பிடித்தமானது விவசாயம் தான். அதிலும் ரசாயன உரங்களுக்கு எதிரான மனோபாவம் கொண்ட இவர் இயற்கை விவசாய ஆர்வலர்.
அதனால் இயற்கை விவசாயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, தற்போது தனியாக ஒரு பண்ணையை உருவாக்கி அங்குள்ள நிலத்தில் இயற்கை சார்ந்து விவசாயம் செய்கிறார். நெல்லை விளைவிப்பதில் உள்ள அரசியலை கூட புட்டுபுட்டு வைக்கிறார் சீனிவாசன். ஆரம்பத்தில் இவருக்கு உதவியாக இருந்தது இயற்கை விவசாயம் குறித்த புத்தகங்கள் தானாம். அதன் பின் விவசாய அதிகாரிகளும் பொதுமக்களும் கூட இவரது முயற்சிக்கு ஒத்துழைப்பு தர ஆரம்பித்துவிட்டார்களாம்.