ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஈரம் படத்தின் மூலம் எடிட்டராக, தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கிஷோர். தொடர்ந்து ஆனந்தபுரத்து வீடு, ஆடுகளம், பயணம், உதயன், 180, காஞ்சனா, ஆரோகணம், பரதேசி, எங்கேயும் எப்போதும், எதிர்நீச்சல் உள்ளிட்ட பல படங்களுக்கு எடிட்டராக பணிபுரிந்துள்ளார். இதில் ஆடுகளம் படத்திற்காக சிறந்த படத்தொகுப்பாளருக்கான தேசிய விருது பெற்றார். தற்போது, வெற்றிமாறன் இயக்கும், விசாரணை படத்தில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் கடந்த வௌ்ளிக்கிழமை, விசாரணை படத்தில் பணியாற்றி வந்தபோது திடீரென மயங்கி விழுந்தார் கிஷோர். இதனையடுத்து அவரை உடனடியாக வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்த்தார் இயக்குநர் வெற்றிமாறன். அங்கு அவரை பரிசோதனை செய்ததில் மூளைக்கு செல்லும் நரம்பில் அடைப்பு ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து ஆபரேஷன் மூலம் அது சரிசெய்யப்பட்டது. ஆனால் அவர் நினைவு திரும்பவில்லை. இதனிடையே அவரது உடலில் லேசான அசைவுகள் இன்று இருந்ததாம். தொடர்ந்து அவர் ஐ.சி.யூ.,வில் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.
கிஷோரை வைத்து படம் பண்ணிய இயக்குநர்களோ, தயாரிப்பாளர்களோ அல்லது நடிகர்களோ, யாரேனும் மனது வைத்து அவருக்கு இன்னும் உயர் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுத்தால், தேசிய விருது பெற்ற கலைஞரின் உயிரை காப்பாற்றலாம். திரையுலகினர் முன்வருவார்களா...?!