தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
லிங்கா படத்துக்கு நஷ்ட ஈடு தரக்கோரி அப்படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தை, போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால் மெகா பிச்சை போராட்டத்துக்குப்பிறகு பிரச்சினை இன்னும் சூடு பிடித்தது. அதோடு, முதலில் சிறிய தொகையை நஷ்ட ஈடாக தருவதாக சொன்ன ரஜினிதரப்பு பின்னர் அதிக தொகை தர முன்வந்திருப்பதாக தகவல் வெளியாகி வந்தன. நடிகர் சங்கத்தலைவரான சரதகுமார் இந்த விவகாரத்தில் தலையிட்டு சமூக தீர்வுக்கான பேச்சுவார்தையிலும் ஈடுபட்டிருந்தார். இந்தநிலையில், லிங்கா தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் சார்பில், லிங்கா படம் பற்றியோ, ரஜினி பற்றியோ யாரும் எதுவும் பேசக்கூடாது என்று கர்நாடக நீதிமன்றத்தில் தடை வாங்கி விட்டனர். அதுமட்டுமின்றி, முக்கியமான ஊடகங்களும் லிங்கா பற்றிய செய்திகளை வெளியிடக்கூடாது என்றும் தடை வாங்கியிருக்கிறார்கள். இதனால், அடுத்து லிங்கா படம் சம்பந்தமாக சுமூக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தவர்கள் எதுவும் பேச முடியாமல் பின்வாங்கிவிட்டனர். இதையடுத்து, இந்த விசயத்தை சுப்ரீம் கோர்ட்டுக்கு கொண்டு செல்ல லிங்கா படத்தினால் பாதிக்கப்பட்ட விநியோகஸ்தர்கள் முடிவெடுத்திருப்பதாக கோடம்பாக்கத்தில் பேசிக்கொள்கிறார்கள்.