அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நடிக்கத் தொடங்கிய சிம்பு கதாநாயகன் ஆனபிறகு தன்னைத்தானே இயக்கிக் கொள்ளவும் தொடங்கினார். அதோடு, மற்ற டைரக்டர்கள் சொல்லும் கதைகளிலும் தனது தலையீட்டை அதிகமாக செலுத்தினார். அதன்காரணமாகவே சிம்புவை வைத்து படம் பண்ணவே இயக்குனர்கள் அஞ்சினர்.
அதேசமயம், கோவில் படத்துக்கு அவரை புக் பண்ணிய ஹரி மட்டுமே, நான் சொல்வதுதான் கதை, நான் சொல்வதுதான் சீன் இதன்படிதான் நடிக்க வேண்டும் என்று கண்டிசன் போட்டு சிம்புவிடம் வேலை வாங்கினார். அதோடு சிம்புவின் வழக்கமான பாணியை மாற்றி தனது பாணியிலேயே அந்த படத்தில் நடிக்க வைத்தார்.
அதன்பிறகுதான் கொஞ்சம் கொஞ்சமாக மாறி டைரக்டர்களின் விருப்பத்திற்கேற்ற நடிகராக மாறினார் சிம்பு. இருப்பினும், அவர் நடிக்கும் படங்கள் வெளியாகாமல் வருடக்கணக்கில் இழுத்தடிப்பதால், இது நம்ம ஆளு படத்தை அடுத்து தன்னைத்தானே இயக்கிக்கொள்ளவும் சில மெகாப்பட நிறுவனங்களை அணுகி வருகிறார் சிம்பு.
ஆனபோதும், இது நம்ம ஆளு படத்தின் ரிலீசுக்குப்பிறகு பேசுவோம் என்று சிலர் அவருக்கு நம்பிக்கை வாக்குறுதி அளித்திருக்கிறார்களாம். அதனால் இந்த படம் எப்படியேனும் வெற்றிபெற்ற தனது கேரியரை மாற்றியமைக்க வேண்டும் என்று மானசீக தெய்வங்களை வேண்டிக்கொண்டிருக்கிறார் சிம்பு.