அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
மணிரத்னத்துக்கு சரக்கு தீர்ந்துவிட்டது.... அவருக்கு வயதாகிவிட்டதால் இனி அவரால் வெற்றிப்படம் கொடுக்க முடியாது... என்ற கமெண்ட்டுகள் சற்றே ஓவர் என்றாலும், ஒரு விஷயம் மட்டும் மறுக்க முடியாத உண்மை. அலைபாயுதே படத்திற்குப் பிறகு மணிரத்னத்தின் இயக்கத்தில் வெளியான எந்தப்படமும் வசூல்ரீதியாக பாக்ஸ் ஆபீஸ் வெற்றியைப் பெறவில்லை. ராவணன், கடல் படங்கள் மணிரத்னம் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கையை மறுபரிசீலனை செய்ய வைத்தன. போதாக்குறைக்கு கடல் படத்தை வாங்கி நஷ்டமடைந்த விநியோகஸ்தர்கள் மணிரத்னத்தின் அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்து கலாட்டா செய்தனர். அந்த சம்வபத்தினால் ஏற்பட்ட அவமானம் மணிரத்னத்தை பொங்கி எழ வைத்துவிட்டது போலிருக்கிறது.
அலைபாயுதே ஸ்டைலில் ஒரு இளமை பொங்கும் காதல் கதையை எடுக்கிறேன் பார் என்று மனசுக்குள் சவால்விட்டு களத்தில் குதித்தார் மணிரத்னம். துல்கர் சல்மான், நித்யாமேனன் நடிக்க ஓ காதல் கண்மணி படத்தை சத்தமில்லாமல் ஆரம்பித்த மணிரத்னம் தற்போது அதன் இறுதிக்கட்ட பணிகளில் இருக்கிறார். சில தினங்களுக்கு முன் இப்படத்தின் மினி டீஸர் ஒன்றை வெளியிட்டார்கள். தற்போது அதாவது நேற்று, ஓ காதல் கண்மணி படத்தின் டிரைலர் ஒன்றை வெளியிட்டிருக்கிறார் மணிரத்னம். பழைய மணிரத்னம் திரும்பி வந்துவிட்டார் என்று சொல்லுமளவுக்கு செம யூத்ஃபுல்லாக இருக்கிறது - ஓ காதல் கண்மணி படத்தின் டிரைலர். படத்துக்கும் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு கிடைக்கும் என்று தோன்றுகிறது.