மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
மணிரத்தினத்தின் காதல் படங்கள் முற்றிலும் வித்தியாசமாக இருக்கும். அவர் இயக்கிய அலைபாயுதே, திருமணம் செய்து கொண்டு வீட்டுக்கு தெரியாமல் வாழும் காதலர்களை பற்றியது. இப்போது அவர் இயக்கி உள்ள ஓ காதல் கண்மணியும் அதுபோன்ற ஒரு புரட்சிகரமான காதல் கதை என்கிறார்கள்.
ஆதி (துல்கர் சல்மான்) தாராவை (நித்யா மேனன்) தீவிரமாக காதலிக்கிறார். அவரும் உயிருக்கு உயிராக காதலிக்கிறார். ஆனால் துல்கருக்கு திருமண வாழ்க்கையில் உடன்பாடில்லை. திருமணம் செய்யாமலேயே ஒரு ஆணும், பெண்ணும் கடைசி வரை சேர்ந்து வாழ முடியும் என்ற கருத்து உடையவர். நித்யாமேனனும், அவரது குடும்பமும் திருமண சடங்கிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறவர்கள். இறுதியில் வெல்வது காதலா? கல்யாணமா என்பதுதான் கதை என்கிறார்கள்.
ஓ காதல் கண்மணியில் துல்கர் சல்மானுடன், நித்யாமேனன், பிரகாஷ்ராஜ், லீலா சாம்சன், கனிகா நடித்திருக்கிறார்கள். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார். மணிரத்தினத்துடன் ஏ.ஆர்.ரகுமான் இணையும் 12வது படம். ஸ்ரீகர் பிரசாத் எடிட்டராக பணியாற்றுகிறார். பிருந்தா நடனம் அமைத்துள்ளார், மணிரத்தினத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரித்துள்ளது, படம் ஏப்ரல் வெளியீடு.