ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சத்யா 2 படத்தின் மூலம் படுதோல்வியை சந்தித்த பாலிவுட் இயக்குநர் ராம்கோபால் வர்மா, மென்டல் படத்தின் மூலம், மீண்டும் பாலிவுட்டிற்கு திரும்பியுள்ளார். சத்யா கம்பெனி, சர்கார் உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கியவர் ராம்கோபால் வர்மா. இவர் இயக்கிய சத்யா படத்தின் இரண்டாம் பாகம், 2013ல் வெளிவந்தது. அந்தபடம், இதுவரை பாலிவுட் வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு படுதோல்வியை சந்தித்தது. இதனையடுத்து, சில காலம் அமைதியாக இருந்த ராம்கோபால் வர்மா, மென்டல் படத்தின் மூலம் மீண்டும் வெளிச்சத்திற்கு வருகிறார். டிஸ்கா சோப்ரா, சச்சின் ஜோஷி முன்னணி வேடங்களில் நடிக்கின்றனர். சைக்காலஜிக்கல் திரில்லர் படமான மென்டல் படத்தை தொடர்ந்து, ராம்கோபால் வர்மா, XXX எனும் பெயரிலான படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார். பாலிவுட்டில் பரபரப்பின்றி இதுவரை ராம்கோபால் வர்மா இருந்திருந்தாலும், தென்னிந்திய திரையுலகில்ல், இவரது இயக்கத்தில் ரெளடி, ஐஸ் கிரீம் மற்றும் கொலுசு உள்ளிட்ட படங்கள் வெளியான வண்ணமே உள்ளது குறிப்பிடத்தக்கது.