'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சத்யா 2 படத்தின் மூலம் படுதோல்வியை சந்தித்த பாலிவுட் இயக்குநர் ராம்கோபால் வர்மா, மென்டல் படத்தின் மூலம், மீண்டும் பாலிவுட்டிற்கு திரும்பியுள்ளார். சத்யா கம்பெனி, சர்கார் உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கியவர் ராம்கோபால் வர்மா. இவர் இயக்கிய சத்யா படத்தின் இரண்டாம் பாகம், 2013ல் வெளிவந்தது. அந்தபடம், இதுவரை பாலிவுட் வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு படுதோல்வியை சந்தித்தது. இதனையடுத்து, சில காலம் அமைதியாக இருந்த ராம்கோபால் வர்மா, மென்டல் படத்தின் மூலம் மீண்டும் வெளிச்சத்திற்கு வருகிறார். டிஸ்கா சோப்ரா, சச்சின் ஜோஷி முன்னணி வேடங்களில் நடிக்கின்றனர். சைக்காலஜிக்கல் திரில்லர் படமான மென்டல் படத்தை தொடர்ந்து, ராம்கோபால் வர்மா, XXX எனும் பெயரிலான படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார். பாலிவுட்டில் பரபரப்பின்றி இதுவரை ராம்கோபால் வர்மா இருந்திருந்தாலும், தென்னிந்திய திரையுலகில்ல், இவரது இயக்கத்தில் ரெளடி, ஐஸ் கிரீம் மற்றும் கொலுசு உள்ளிட்ட படங்கள் வெளியான வண்ணமே உள்ளது குறிப்பிடத்தக்கது.