'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மார்ச் மாதம் என்றாலே வீட்டில் உள்ளவர்களும், மாணவ, மாணவிகளும் கொஞ்சம் மிரண்டுதான் போவார்கள். இறுதியாண்டுத் தேர்வு பரபரப்பாக ஆரம்பமாகும் மாதம் இது.
பன்னிரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் வரும் 5ம் தேதி வியாழன் முதல் ஆரம்பமாக உள்ளன. அதோடு, உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளும் பரபரப்பான கட்டத்தை அடைந்துள்ள நிலையில் இந்த மாதம் வெளிவரும் படங்களின் பட்டியலைப் பார்க்கும் போது நமக்கே கொஞ்சம் உதறலாகத்தான் உள்ளது.
ஒரு பக்கம் பரீட்சை, மறுபக்கம் கிரிக்கெட் ஆகியவற்றுக்கிடையில் இந்தப் படங்கள் அனைத்தும் வெளிவந்து வெற்றி பெறுவதென்பது அவ்வளவு எளிதாக இருக்காது என்றே தோன்றுகிறது. இருந்தாலும் ஜனவரி மாதத்திலும், பிப்ரவரி மாதத்திலும் சில பெரிய படங்களின் வெளியீடு, ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வர உள்ள மேலும் சில பெரிய படங்களின் காரணத்தால் கிடைக்கும் இடைவெளியில் இந்தப் படங்களை வெளியிட்டே ஆக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
வரும் 6ம் தேதி “எனக்குள் ஒருவன், என் வழி தனி வழி, தொப்பி, சேர்ந்து போலாமா, ரொம்ப நல்லவன்டா நீ, இரவும் பகலும், மகா மகா, ஆயா வட சுட்ட கதை, இஞ்சி முறப்பா, கனல்” ஆகிய படங்களும் மார்ச் 13ம் தேதி “வானவில் வாழ்க்கை, கதம் கதம், இவனுக்கு தண்ணில கண்டம், பட்ற, மகாபலிபுரம்,” ஆகிய படங்களும் அதற்கடுத்த வாரங்களில் “மூணே மூணு வார்த்தை, அகத்திணை, மூச், திலகர், கள்ளப்படம், சார்லஸ் ஷபீக் கார்த்திகா, கடவுள் பாதி மிருகம் பாதி, வலியவன்” ஆகிய படங்களும் வெளிவரத் தயாராக உள்ளன. இவை அனைத்துமே கடைசி நேர மாறுதலுக்குட்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படங்களில் 'எனக்குள் ஒருவன்' படத்தில் சித்தார்த்தும், 'வலியவன்' படத்தில் ஜெய்யும் நடித்துள்ளனர். இவர்கள் இருவர் மட்டுமே தெரிந்த முகங்களாக உள்ளனர். மற்ற படங்கள் அனைத்துமே நட்சத்திர அந்தஸ்துடன் கூடிய படங்கள் அல்ல என்பதுதான் உண்மை. இவற்றில் சில படங்கள் புதிய முயற்சிகளாக, புதிய கதைக்களத்துடன் எடுக்கப்பட்டுள்ளன. இவற்றிற்கு வரவேற்பு எப்படியிருக்கும் என்பது படம் வெளிவந்த பிறகுதான் கூற முடியும்.
இந்தப் படங்கள் அனைத்திற்கும் ஓரளவிற்காவது தியேட்டர்கள் கிடைத்தால்தான் அவை வெளிவர முடியும். ஒரே சமயத்தில் இப்படி ஐந்தாறு படங்கள் வெளிவந்தால் தியேட்டர்கள் கிடைப்பதிலும் சிக்கல்கள் எழும்.
விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால் நடித்த 'இடம் பொருள் ஏவல்' படமும் முதலில் மார்ச் மாதம் வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், சமீபத்தில் அந்தப் படம் பற்றிய எந்த தகவலும் வெளியாகவில்லை. ஒருவேளை படத்தை ஏப்ரல் மாதம் தள்ளி வைத்திருக்கவும் வாய்ப்புள்ளது.
சிம்பு, ஹன்சிகா நடித்துள்ள 'வாலு' படமும் மார்ச் 27ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் முதல் வாரத்திலேயே மிகப் பெரிய படங்கள் வெளிவருவதால் அதற்கு முன்னதாக இப்படி பல படங்களை வெளியிட முடிவெடுத்துள்ளார்கள்.
ஏப்ரல் மாதத்தில் 'உத்தம வில்லன், நண்பேன்டா, கொம்பன், முனி 3, புறம்போக்கு, ஓகே கண்மணி,' போன்ற படங்கள் வெளிவர உள்ளன.
பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும் போது மார்ச் மாதம் இன்னும் அதிகமான படங்கள் வெளிவரவே வாய்ப்புள்ளது.