மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
பிரகாஷ்ராஜின் முன்னாள் மனைவியும், நடிகையுமான லலிதாகுமாரி பல இளைஞர்களை ஊக்குவித்து ஒரு திரைப்படம் உருவாக காரணமாக இருந்திருக்கிறார். அதோடு அந்தப் படத்தின் ஆடை வடிவமைப்பாளராகவும் பணியாற்றி உள்ளார்.
ஓவியக்கல்லூரியில் படித்து ஓவியராக பணியாற்றி வந்த சத்யமூர்த்தி சரவணன் என்ற இளைஞர் லலிதாகுமாரியின் மகளுக்கு ஓவிய ஆசிரியராக இருந்தார். அவருக்கு சினிமா இயக்க வேண்டும் என்பது ஆசை. இதனை லலிதாகுமாரியிடம் -கூறினார். அவர் பிரகாஷ்ராஜிடம் (விவாகரத்துக்கு முன்பு) சத்தியமூர்த்தியை உதவியாளராக சேர்த்து விட்டார். இனிது இனிது உள்பட பல படங்களில் பணியாற்றிய அவர் இப்போது சிஎஸ்கே (சார்லஸ், ஷஃபிக், கார்த்திகா) என்ற படத்தை இயக்கி உள்ளார். இந்தப் படத்திற்கு வசனகர்த்தா, இசை அமைப்பாளர், ஒளிப்பதிவாளர் ஆகியோரை அறிமுகப்படுத்தி வைத்ததும் லலிதாகுமாரிதான். இந்த படத்திற்கு பின்னணியில் இருந்து அவர் பல உதவிகளை செய்திருக்கிறார்.
இதனை படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய அனைவரும் நன்றியுடன் குறிப்பிட்டார்கள். "இன்றைக்கு என் மகள் வெளிநாட்டில் பைன் ஆர்ட்ஸ் துறையில் பெரிய படிப்பு படிக்கிறாள் என்றால் அதற்கு இந்த படத்தின் இயக்குனர் சத்தியமூர்த்திதான் காரணம். அவருக்கு இந்த நன்றி கடனாக ஏதாவது செய்ய வேண்டுமே என்று நினைத்துதான் அவரை பிரகாஷ்ராஜிடம் சேர்த்து விட்டேன். இந்தப் படத்துக்கும் என்னால் இயன்ற உதவிகளை செய்துள்ளேன்" என்றார் லலிதாகுமாரி.