ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பிரமாண்ட இயக்குநர் ஷங்கரிடம் உதவியாளராக பணியாற்றியவர் அட்லி. அதையடுத்து அவரது தயாரிப்பிலேயே ராஜா ராணி என்ற படத்தை ஆர்யா-நயன்தாரா-ஜெய்-நஸ்ரியா ஆகியோரை வைத்து இயக்கினர். அந்த படத்தின் முதல் நாள் படப்பிடிப்பை கமல்ஹாசன் தொடங்கி வைத்தார். அந்த படமும் ஹிட்டாகியது.
அதனால் அதையடுத்து உடனடியாக தனது அடுத்த படத்தை அட்லி இயக்குவார் என்று பார்த்தால் சில மாதங்களாக எந்தவித அறிவிப்பும் வரவில்லை. அதன்பிறகுதான் விஜய்யிடம் அவர் சொன்ன கதை ஓகே வாகி விட்டதாகவும், அடுத்த படத்தை விஜய்யை வைத்தே அட்லி இயக்குகிறார் என்றும் அதிகாரப்பூர்வமான செய்திகள் வெளியாகின.ஆக, இரண்டாவது படத்திலேயே விஜய்யை இயக்கும் அளவுக்கு பெரிய இயக்குனராகி விட்ட அட்லி, சில மாதங்களுக்கு முன்புதான, நான் மகான் அல்ல படத்தில் கார்த்தியின் தங்கையாகவும், சிங்கம் படத்தில் அனுஷ்காவின் தங்கையாகவும் நடித்த ப்ரியாவை திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில், தேனிலவு கொண்டாட்டங்களை முடித்து விட்டு தற்போது மீண்டும் விஜய் பட வேலைகளில் ஈடுபட்டிருக்கிறார். தற்போது சிம்புதேவன் இயக்கும் புலி படத்தில் தீவிரமாக நடித்துக்கொண்டிருக்கும் விஜய், அந்த படத்தை எப்போது முடிப்பார். எப்போது அட்லியின் இயக்கத்தில் நடிப்பார் என்பது போன்ற செய்திகள் மட்டும் சஸ்பென்சாகவே உள்ளன.