டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
1975ல் கே.பாலசந்தரின் அபூர்வ ராகங்கள் படத்தில் அறிமுகமான ரஜினி, அதையடுத்து அவரது இயக்கத்திலேயே மூன்று முடிச்சு படத்திலும் நடித்தார். பின்னர் 1977-ல் நடித்த புவனா ஒரு கேள்விக்குறி படம் அவரை உச்சத்துக்கு கொண்டு சென்றது. இத்தனைக்கும் அந்த படத்தில் சிவகுமார்தான் ஹீரோ. சுமித்ரா ஹீரோயின். ஆனால் வில்லனாக நடித்த ரஜினிக்காக அந்த படம் ஓடியது. அதிலிருந்து சூடு பிடித்த ரஜினியின் மார்க்கெட் ஜெட் வேகத்தில் செல்லத் தொடங்கியது.
ஆனால் அந்த காலட்டத்தில் எல்லாம் ரஜினி நடித்த படங்கள் பிரமாண்டம் இல்லாமல் கதையை முன்நிறுத்திதான் தயாரிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில், சமீபகாலமாக அவர் நடித்த சிவாஜி, எந்திரன், கோச்சடையான், லிங்கா போன்ற படங்கள் பிரமாண்டத்தை முன்வைத்தே தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதன்பிறகு அவர் நடிக்கப்போகும் படங்களும் கண்டிப்பாக பிரமாண்டமாகவே இருக்கும்.
ஆனால், ரஜினியோ இப்போதும் பிரமாண்டத்தை நம்பாமல் கதையைத்தான் அதிகமாக நம்புகிறாராம். இதுபற்றி அவர் விடுத்துள்ள ஒரு செய்தியில், பிரமாண்டம் என்பது படத்தின் வெற்றியை ஒருபோதும் தீர்மானிக்காது. படத்தின் முதுகெலும்பு வெற்றி எல்லாமே கதைதான். பாரதிராஜா இயக்கிய கிழக்குச்சீமையிலே படத்தில் எந்த பிரமாண்டமும் இல்லை. ஆனால் அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதற்கு காரணம் கதை மட்டுமே. ஆக, பிரமாண்டத்துக்காக எந்த படமும் ஓடாது. கதைக்காக மட்டுமே ஓடும் என்கிறாராம் ரஜினி.