ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நான்கு வாரங்களுக்கு முன் மலையாள நடிகரான ஷைன் டாம் சாக்கோ என்பவர் கொகெய்ன் என்கிற போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டார். அவருடன் ஒரு உதவி இயக்குனர் மற்றும் மூன்று மாடல் அழகிகளும் சேர்ந்து கைதுசெய்யப்பட்டனர். இந்த சம்பவம் மலையாள திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து அவர்களிடம் போதைப்பொருள் நெட்வொர்க் குறித்த தீவிர விசாரணை நடத்திய போலீஸார், அப்படியே சினிமா துறையினரின் பக்கம் தங்களது விசாரணையை திருப்பி விட்டனர்.
குறிப்பாக டாம் சாக்கோ நடித்த 'இதிகாசா' படக்குழுவினர் அனைவரும் போலீசாரின் கெடுபிடிகளுக்கு ஆளாகி அவதியுற்றனர். இன்னொருபக்கம் கைது செய்யப்பட்டவர்களின் ரத்தத்தை சாம்பிள் எடுத்து பரிசோதனைக்காக காக்கநாடு கெமிக்கல் லேப்புக்கு போலீஸார் அனுப்பி வைத்திருந்தனர். ஆனால் இப்போது ரிசல்ட் நெகட்டிவாக வந்திருக்கிறது. அதாவது போலீஸுக்கு நெகட்டிவாக.. ஆம்.. அந்த ஐந்து பேரும் போதைப்பொருள் பயன்படுத்தியிருக்கவில்லை என ரிப்போர்ட் வந்துள்ளதால் இது என்ன புது திருப்பம் என போலீஸார் குழம்பிப்போயுள்ளர்களாம்.