ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
2013ல் மலையாளத்தில் பஹத் பாசில், இந்திரஜித், ஸ்வாதி நடித்து வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய 'ஆமென்' படத்தை இயக்கியவர் லிஜோ ஜோஸ் பள்ளிசேரி. இவர் தான் தற்போது பிருத்விராஜ், ஆர்யா இருவரும் மலையாளத்தில் இணைந்து நடித்துவரும் இந்தப்படத்தை இயக்கி வருகிறார். இந்த ஸ்டார் ஹீரோக்களுடன் பிருத்விராஜின் சகோதரர் இந்திரஜித், ஆசிப் அலி மற்றும் சன்னிவெய்ன் ஆகியோரும் நடிப்பதால், இது அக்மார்க் மல்டி ஸ்டாரர் படமாக உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இந்தப்படத்தை முடித்துவிட்டு, லிஜோ ஜோஸ் அடுத்ததாக மம்முட்டியை வைத்து ஒரு படம் இயக்கவிருப்பதாக இப்போதே ஒரு பேச்சு அடிபட ஆரம்பித்துள்ளது. மலையாளத்தில் புகழ்பெற்ற எழுத்தாளரான ஓ.வி.விஜயன் என்பவர் எழுதிய 'கஸக்கிண்டே இதிகாசம்' என்கிற நாவலை தழுவி இந்தப்படம் எடுக்கப்பட இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதுகுறித்த ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை நடந்திருப்பதாகவும், இது அதிகாரப்பூர்வமாக இன்னும் சில நாட்களில் உறுதிசெய்யப்படலாம் எனவும் தெரிகிறது.