'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
எனக்கு பொய் சொல்ல தெரியாது, பொய் சொல்லவும் பிடிக்காது. இத்தகைய காரணங்களினாலேயே, நான் அரசியலுக்கு வர விரும்பவில்லை என்று பாலிவுட் நடிகர் நானா படேகர் கூறியுள்ளார்.
2004ம் ஆண்டு வெளிவந்த ஆப் தக் ஷப்பான் படத்தில் அபார நடிப்பை வெளிப்படுத்திய நானா படேகர், தற்போது அதன் இரண்டாம் பாகமான ஆப் தக் ஷப்பான் -2 விலும் நடித்துள்ளார். இவ்விரு படங்களிலும் நடித்தபோது ஏற்பட்ட அனுபவங்கள், தன்னுடைய திரையுலக வாழ்க்கை குறித்து அவர் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்...
இந்த படத்தில் உங்களுடைய கேரக்டர் குறித்து..
ஆப் தக் ஷப்பான் படத்தில் நடித்த அதே கேரக்டரிலேயே, இந்த இரண்டாம் பாகத்திலும் நடித்துள்ளேன். முதல் பாகத்தின் முடிவே, இரண்டாம் பாகத்தின் துவக்கம் ஆகும். போலீஸ் ஆபிசர் கேரக்டரில் நடித்துள்ளேன். குடும்பத்தை பறிகொடுத்தநிலையில், என் மகனுடன் எஞ்சியிருக்கும் வாழ்க்கையை, அமைதியாக கழித்து வருகிறேன். குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்ததை அடுத்து, மீண்டும் நான் போலீஸ் ஆபிசராக பணியில் சேருகிறேன். அதன்பின்னர், குற்றங்கள் தடுக்கப்பட்டதா என்பது தான் ஆப் தக் ஷப்பான் -2 படத்தின் மீதிக்கதை.
இப்படத்திற்கும், ராம்கோபால் வர்மா, ஷிமித் அமினுக்கும் தொடர்புள்ளதா?
2004ல் வெளிவந்த ஆப் தக் ஷப்பான் படத்தை ராம்கோபால் வர்மா தயாரித்திருந்தார். ஷிமித் அமின் இயக்கியிருந்தார். ஆனால், இரண்டாம் பாகத்தில், அவர்கள் இருவரும் இடம்பெறவில்லை.
காமெடி நைட் வித் கபில் நிகழ்ச்சியின் மூலம், படத்தை புரோமோட் செய்வீர்களா?
நிச்சயமாக இல்லை. காமெடி நைட் வித் கபில் உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் மூலம், படத்தை புரோமோட் செய்வதில் எனக்கு விருப்பம் இல்லை. உண்மையை சொல்ல வேண்டுமென்றால், காமெடி நைட் வித் கபில் நிகழ்ச்சி எனக்கு பிடிக்காத நிகழ்ச்சி. அதில் பங்கேற்பவர்கள் மீதும் எனக்கு கோபம் வரும். என் படம் வசூல் சாதனை படைக்கும் பட்சத்தில், கபில் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஒருவேளை நினைக்கலாம். கபில் நிகழ்ச்சியில் படத்தை புரோமோட் செய்வதன் மூலம், படம் வெற்றியடையும் என்பது மூடநம்பிக்கை என்பது எனது கருத்து...
சக நடிகர்களுடன் பிரச்னை செய்வீர்கள் என்பது உண்மையா?
ஆமாம். நான் எப்போதும் மாறுபட்ட கருத்து உடையவன். இருந்தபோதிலும், மற்றவர்களின் பேச்சுரிமையை எப்போதும் மதிப்பவன். ஆனால், என்னை குறித்த அவர்களது பேச்சு, ஒரு எல்லை மீறும் பட்சத்திலேயே, சக நடிகர்ளுடன் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. என்னைப் பற்றி நான் தான் வெளிப்படையாக கூறமுடியும். ஆனால், இதை மற்றவர்கள் கூறும்போது தான் பிணக்கு ஏற்படுகிறது. சக நடிகர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படுவதை, நான் அவர்களை எதிரியாக கருதுவதாக யாரும் கருதிவிடக்கூடாது....
அரசியல் பிரவேசம் உண்டா?
எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல், ஊழல் அரசியலுக்கு எதிரானவன். நான் இப்போதோ அல்லது வருங்காலத்திலோ, எப்போதும் அரசியலில் நுழைய விருப்பமில்லை. நான் எல்லா ஜாதி, வகுப்பு, மதம் உள்ளிட்ட அனைத்திற்கும் மதிப்பு அளிக்கவேண்டும் என்று நினைப்பவன். அரசியலில் சேர்ந்தேனேயானால், ஏதாவது ஒரு பிரிவிற்கு நான் சாதகமாக நடந்துகொள்ள வேண்டி வரும். அது எனக்கு பிடிக்காத ஒன்று. அரசியலில் ஜெயிக்க வேண்டுமென்றால், நிறைய பொய் சொல்ல வேண்டியிருக்கும். இத்தகைய காரணங்களினாலேயே, எனக்கு அரசியல் பிடிக்காது. அரசியலிலும் நுழைய மாட்டேன்...
கற்பழி்ப்பு குற்றவாளிகளுக்கு என்ன மாதிரியான தண்டனை வழங்கலாம்?
கற்பழி்ப்பு குற்றவாளிகளை, சாகும்வரை தூக்கில் இட வேண்டும் என்பதே எனது கருத்து. சிறுமிகள் மற்றும் மைனர் குழந்தைகளை எவ்வாறு பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்த அவர்களுக்கு மனது வருகிறதோ? எனக்கு தெரியவில்லை. உங்களுக்கு ஒரு பெண்ணை பிடித்திருந்தால், அவளிடத்தில் சென்று நேரடியாக சென்று உங்கள் காதலை சொல்லுங்கள்...அவர்களும் ஏற்றுக்கொள்வார்கள். அதைவிடுத்து, காதலிக்க மறுக்கும் பெண்களை, பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்துவது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று நானா படேகர் கூறினார்.