மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
மரணம் அடைந்த பழம்பெரும் கேமராமேன் ஏ.வின்சென்ட்டின் சொந்த ஊர், கேரள மாநிலம் கோழிக்கோடு. 1956-ஆம் ஆண்டு வெளியான "அமர தீபம் படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராகத் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து "கல்யாண பரிசு, "உத்தமபுத்திரன், "கௌரவம், "சவாலே சமாளி, "வசந்த மாளிகை, "எங்க வீட்டு பிள்ளை உள்பட ஏராளமான படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். மலையாளத் திரையுலகிலும் முத்திரை பதித்துள்ள வின்சென்ட் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் 150-க்கும் மேற்பட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.