ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தமிழ் சினிமாவின் பிரபல பெண் கவிஞர் தாமரை. இயக்குநர் சீமானால், ''இனியவளே'' படத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட தாமரை, பின்னாளில் பல படங்களுக்கு பாடல்கள் எழுதி பிரபலமானார். குறிப்பாக கௌதம் மேனனின், ''மின்னலே'' தொடங்கி, ''என்னை அறிந்தால்'' வரை அனைத்து படங்களிலும் தாமரை பாடல்கள் எழுதியுள்ளார்.
கவிஞர் தாமரையின் கணவர், சில மாதங்களுக்கு முன்னர் அவரை விட்டு பிரிந்து எங்கோ சென்றுவிட்டார். இந்நிலையில், தன்னையும் தன்மகனையும் தவிக்க விட்டு சென்று தலைமறைவாக இருக்கும், தனது கணவரை கண்டுபிடித்து தரக் கோரி திடீரென தர்ணா போராட்டத்தில் இறங்கி இருக்கிறார் தாமரை. சென்னை, சூளைமேடு, பெரியார் பாதை அருகே தர்ணா போராட்டத்தை நடத்தி வருகிறார்.
தாமரையின் இந்த திடீர் தர்ணா போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.