'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சமூக வலைத்தளங்களில் ஈடுபட ஆரம்பித்துவிட்டால் அதை விட்டு விலக முடியாத அளவிற்கு ஒரு போதை பலரிடம் ஏற்பட்டுவிட்டது. அது நட்சத்திரங்களுக்கும் விதிவிலக்கல்ல. நடிகர்களை விட நடிகைகளுக்குத்தான் சமூக வலைத்தளங்களில் வரவேற்பு அதிகம். நடிகைகள் என்று சொல்வதை விட பெண்களுக்கும் என்று கூட சேர்த்து சொல்லலாம். ஒரு பெண் தூங்கப் போகிறேன் என்று ஒரு பதிவு போட்டால் கூட அதற்கு ஆயிரம் லைக்குகள் விழும், அதுவே ஒரு ஆண் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன் என பதிவு போட்டால், “சீக்கிரமா செய்து முடி, வேலை இருக்கு இல்ல” என்று மற்றவர்கள் கிண்டலடிக்கும் நிலமைதான் ஆண்களுக்கு உண்டு என்று சமூக வலைத்தளங்களிலேயே நகைச்சுவையாகப் பல பதிவுகளைப் பார்க்கலாம்.
சமந்தாவையும், டிவிட்டரையும் பிரிக்கவே முடியாது என்று சமீப காலத்தில் சொல்லப்பட்டதுதான் அதிகம். எதைப் பற்றியும் கருத்துக்களைப் பதிவிட்டு வந்தவர் திடீரென பிப்ரவர் 19ம் தேதியன்று டிவிட்டரிலிருந்து சில காலம் விலகியிருக்கப் போகிறேன் என அறிவித்தார். அதைத் தொடர்ந்து அவர் ஏன் டிவிட்டரை விட்டு விலகினார் என்பதே செய்தியாகி பலரும் அதைப் பற்றிக் கருத்துக்களைச் சொல்ல ஆரம்பித்தனர்
.
இதனிடையே நேற்று திடீரென மீண்டும் டிவிட்டரில் வந்து பதிவுகளைப் போட்டு அவருடைய ரசிகர்களின் ஏமாற்றத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தார். “உங்கள் பதில் டிவீட்டுகளால் மகிழ்ச்சியடைந்தேன். இதற்கு மேல் எதுவும் கேட்கப் போவதில்லை. யாரோ ஒருவர் அதிகமாகப் பேசிக் கொண்டேயிருந்தார், அதைப் பற்றி மட்டும்தான் நான் இப்போது சொல்ல முடியும்,” என்று டிவிட்டரை விட்டு தற்காலிகமாக விலகியதற்கான காரணத்தையும் சமந்தா கூறியிருக்கிறார்.
தற்போது மீண்டும் பழையபடி டிவிட்டரில் பரபரப்பாக இயங்க ஆரம்பித்துவிட்டார்.