கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
பாலிவுட்டின் முன்னாள் கனவு கன்னி கஜோல். நடிகர் அஜய் தேவ்கானை திருமணம் செய்த பின்னர் சினிமாவுக்கு முழுக்கு போட்டவர், சில ஆண்டு இடைவௌிக்கு பிறகு இப்போது மீண்டும் நடிக்க துவங்கியுள்ளார். ரீ-என்ட்ரி குறித்து கஜோல் கூறியதாவது, தற்போது நான் ஒரு படத்தில் நடித்து வருகிறேன். ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. ராம் மத்வானி இயக்கும் படத்தில் நான் நடிக்கவில்லை. தற்போது நான் நடித்து வரும் படம் முற்றிலும் வித்தியாசமானது. இது ரீ-மேக் படம் கிடையாது. இது ஒரு ஒரிஜினல் கதை. இப்படம் படம் பற்றி என்னால் அதிகம் கூற முடியாது. அடுத்தாண்டு, அதாவது 2016ல் இப்படம் ரிலீஸாகும் என்றார்.
ஷாரூக்கான் உடன் நடிப்பது குறித்து பதிலளித்த கஜோல், ஷாரூக்கான் உடன் நடிப்பது அருமையான விஷயம். எனக்கேற்ற நடிகர் ஷாரூக்கான். அவருடன் விரைவில் நடிப்பேன் என்றவர் ரோகித் ஷெட்டி இயக்கத்தில், ஷாரூக்கான் உடன் நீங்கள் நடிக்கிறீர்களா என்று கேட்டபோது, அதுதொடர்பான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. நடிப்பது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை, பார்க்கலாம் என்கிறார்.