ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சென்னை எக்ஸ்பிரஸ் படத்திற்கு பிறகு மீண்டும் ரோகித் ஷெட்டியும், ஷாரூக்கானும் இணைந்து ஒரு படத்தில் பணியாற்ற உள்ளனர். இப்படத்தில் பாலிவுட்டின் பிரபலமான 17 நட்சத்திரங்கள் ஒரு முக்கியமான ரோலில் நடிக்க போவதாக தகவல்கள் வௌியானது. இதை ஷாரூக்கான் உறுதிப்படுத்தியுள்ளார். அவர் கூறியுள்ளதாவது, 17 நட்சத்திரங்கள் இப்படத்தில் நடிக்க இருப்பது உண்மை தான். இந்த கதைக்கும் அப்படி ஒரு சூழல் உள்ளது. யார் யார் நடிக்கிறார்கள் என்று இப்போது கூற முடியாது. சம்பந்தப்பட்ட நடிகர்களிடம் பேசி வருகிறோம். எல்லாம் முடிவான பிறகு முறையாக அறிவிக்கிறோம். மார்ச் 4 முதல் படத்தின் ஷூட்டிங்கை துவங்க எண்ணியுள்ளோம் என்று கூறியுள்ளார் ஷாரூக்கான்.
தற்போது ஷாரூக்கான், யாஸ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில், ''பேன்'' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படத்திற்கு பிறகு ரோகித் ஷெட்டியின் படத்தில் நடிக்க இருக்கிறார்.