Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

தமன்னா ரேஞ்சுக்கு கிளாமராக நடிப்பேன்...! -ஐஸ்வர்யா தத்தா பேட்டி

25 பிப், 2015 - 10:58 IST
எழுத்தின் அளவு:
Aiswarya-dutta-interview

கிளாமரைப்பொறுத்தவரை தமன்னாதான் எனது அளவுகோல். அவர் நடித்த பையா, அயன் போன்ற படங்கள் எனக்கு பிடிக்கும். அவர் வெளிப்படுத்தும் கிளாமரும் ரசிக்கும்படியாக இருக்கும். அதனால் அவரை மாதிரி கதைக்கேற்ற கிளாமரை வெளிப்படுத்தி நடிப்பேன் என்கிறார் ஐஸ்வர்யா தத்தா.




தினமலர் இணையதளத்திற்காக அவருடன் ஒரு சந்திப்பு...




தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும் படத்தில் உங்கள் நடிப்புக்கு எந்த மாதிரி ரெஸ்பான்ஸ் கிடைத்திருக்கிறது?


அந்த படத்தில் பிந்துமாதவியும், நானும ஹீரோயினிகளாக நடித்திருந்தோம். நான் நகுலுக்கு ஜோடியாக நடித்தேன். எனக்கு கொடுக்கப்பட்ட காட்சிகளில் எந்த அளவுக்கு சிறப்பாக நடிக்க முடியுமோ அந்த அளவுக்கு நடித்தேன். முக்கியமாக எனது காட்சிகளில் ஒவ்வொன்றும் யதார்த்தமாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். அதோடு எந்த நடிகையின் சாயலும் எனது நடிப்பில் வந்து விடக்கூடாது என்று டைரக்டர்கள் சொல்லிக்கொடுத்ததை எனது பாணியிலேயே வெளிப்படுத்தினேன். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.


முக்கியமாக சில டைரக்டர்கள் எனக்கு வாழ்த்து சொன்னார்கள். அது பெரிய சந்தோசமாக இருந்தது. அதோடு சுசீந்திரன் சார் விஷாலை வைத்து இயக்கும் படத்திற்கு இரண்டு நாயகிகளில் ஒருவராக என்னை ஒப்பந்தம் செய்து விட்டார். மேலும், இரண்டு டைரக்டர்கள் கதை சொல்லியிருக்கிறார்கள். இன்னும் சில தினங்களில் அந்த படங்களும் கமிட்டாகிவிடும். அதனால் தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும் படம் எனக்கு ரொம்ப நல்ல பெயரையே வாங்கித்தந்திருக்கிறது. அதனால் அந்த படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கொடுத்த டைரக்டர், தயாரிப்பாளருக்கு பெரிய அளவில் நன்றிக்கடன்பட்டிருக்கிறேன்.




பெங்காலி பெண்ணான நீங்கள் எப்படி தமிழை புரிந்து நடித்தீர்கள்?


சில விளம்பர படங்களில் நடித்துக்கொண்டிருந்தபோதுதான் அந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதேசமயம், எனக்கு தமிழ் தெரியாது என்பதால் ப்ராம்டிங் முறையில் நடிக்க வைக்க டைரக்டர் விரும்பவில்லை. அதனால் என்னை ஒப்பந்தம் செய்ததும் எனக்கு தமிழ் சொல்லிக்கொடுக்க ஒருவரை நியமித்து விட்டனர். அதனால் ஒரு மூன்று மாதங்களாக தமிழை பயின்ற பிறகே கேமரா முன்பு வந்தேன். அதோடு, நான் கற்ற தமிழை ஸ்பாட்டில் என்னுடன் பணியாற்றியவர்களிடம் எனக்கு தெரிந்த வரைக்கும் பேசி பயிற்சி எடுத்தேன்.அதனால் தற்போது ஓரளவு தமிழை பேசி வருகிறேன். மேலும், தமிழ் வார்த்தைகளின் அர்த்தங்களை ஓரளவு புரிந்த பிறகே நான் அந்த படத்தில் நடித்ததால் தமிழில் பேசி நடித்தது எனக்கு கஷ்டமாக தெரியவில்லை.


பிந்துமாதவியைவிட சிறப்பாக நடிக்க வேண்டும் என்ற போட்டி எண்ணம் உங்களுக்கு ஏற்பட்டதா?


நன்றாக நடிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ஆனால் பிந்து மாதவியை போட்டியாக நினைக்கவில்லை. காரணம், அவர் என்னை விட சீனியர் நடிகை. அவர் நடித்த சில படங்களை பார்த்திருக்கிறேன். அற்புதமாக நடித்திருந்தார். அதனால் அவர் மீது எனக்கு நிறைய மரியாதை உண்டு. அதோடு, அவர் மாதிரி நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்ற எண்ணம்தான் ஏற்பட்டிருக்கிறது. அந்த படத்தில் நான் நடித்த காட்சிகளை மட்டுமின்றி அவர் நடித்த காட்சிகளையும் நான் ரொம்ப ரசித்தேன்.


நகுலுடன் நடித்த அனுபவம் எப்படி?


அவர் ரொம்ப ஜாலியான நடிகர். தான் பெரிய ஹீரோ என்கிற பந்தாவெல்லாம் துளியும் கிடையாது. படப்பிடிப்புக்கு வந்ததும் என்னிடம் அன்பாக பேசிப்பழகுவார். சில காட்சிகளில் நடிக்கிறபோது நான் எந்த மாதிரி கேமரா முன்பு நின்று நடிக்க வேண்டும் என்றும் டிப்ஸ் கொடுத்தார். கோ-ஆர்ட்டிஸ்டான நகுல் ஒத்துழைப்பு கொடுத்ததினால்தான் என்னால் நன்றாக நடிக்க முடிந்தது. அதனால் முதல் படத்திலேயே நகுல் மாதிரி நல்ல நடிகருடன் ஜோடி சேர்ந்ததை நல்ல வாய்ப்பாக கருதுகிறேன்.


சுசீந்திரன் இயக்கும் படத்தில் எந்த மாதிரி ரோலில் நடிக்கிறீர்கள்?


சுசீந்திரன் இயக்கும் விஷால் படத்தில் காஜல் அகர்வால் ஒரு ஹீரோயினி. நான் இன்னொரு ஹீரோயினியாக நடிக்கிறேன். அந்த படத்தில் எனக்கு சிட்டி கேர்ள் வேடம். அவ்வளவுதான் இப்போதைக்கு சொல்ல முடியும். இன்னும் படமே தொடங்கப்படாததால் இப்போதைக்கு அந்த படம் குறித்து வேறு எந்த தகவலும் நான் சொல்ல விரும்பவில்லை.


ஆனால், விஷால், காஜல்அகர்வால் போன்ற முன்னணி நடிகர் நடிகையுடன் இரண்டாவது படத்திலேயே நான் நடிப்பது சந்தோசமாக உள்ளது. வளர்ந்து வரும் நடிகையான எனக்கு அவர்களுடன் நடிக்கும்போது நிறைய நல்ல அனுபவங்கள் கிடைக்கும் என்பதால், இந்த படத்தின் படப்பிடிப்பு நாளை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறேன்.


பெரும்பாலும் வடக்கத்திய நடிகைகள் கிளாமரில் புகுந்து விளையாடுவார்களே. நீங்கள் எப்படி?


சினிமாவில் பெரிய நடிகையாக வேண்டும் என்பதுதான் எனது ஆசையே. அதிலும் முதல்படமே ஹிட்டானதால் தமிழ் சினிமா மீது எனக்கு பெரிய நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அதனால்தான் தற்போது சென்னையில் நிரந்தரமாக தங்கி விட்டேன். இப்போதைக்கு ஹோட்டலில் தங்கியிருந்தாலும், கூடிய சீக்கிரமே ஒரு வீடு பார்த்து சென்னைவாசியாகி விடுவேன். மேலும், கிளாமரைப்பொறுத்தவரை தமன்னாதான் எனது அளவுகோல். அவர் நடித்த பையா, அயன் போன்ற படங்கள் எனக்கு பிடிக்கும். அவர் வெளிப்படுத்தும் கிளாமரும் ரசிக்கும்படியாகவே இருக்கும். அதனால் அவரை மாதிரி கதைக்கேற்ற கிளாமரை வெளிப்படுத்தி நடிப்பேன்.


மற்றபடி நீச்சல் உடை, உதட்டு முத்தக்காட்சி பற்றி இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது. எதிர்காலத்தில் எனக்கு வரும் கதைகளைப்பொறுத்துதான். நடிப்பேனா? மாட்டேனா? என்பதை பற்றி முடிவெடுப்பேன். அதேசமயம், ரசிக்கும்படியான கிளாமர் என்பதில் உறுதியாக இருப்பேன். பெரிய வாய்ப்பு கிடைக்கிறதே என்பதற்காக ஆபாசமாக ஒருபோதும் நடிக்க மாட்டேன்.


தமிழ் சினிமாவில் உங்களை அதிகம் கவர்ந்த ஹீரோக்கள் யார் யார்?


விஜய், அஜீத், சூர்யா என எல்லா நடிகர்களின் படங்களையும் விரும்பிப் பார்ப்பேன். ஆனால் எனக்கு அதிகமாக பிடித்த நடிகர்கள் என்றால் தனுஷ், உதயநிதிதான். வேலையில்லா பட்டதாரி, அனேகன் படங்களை பார்த்தபோது தனுஷின் ரசிகையாகவும், ஒரு கல் ஒரு கண்ணாடி, இது கதிர்வேலனின் காதல் படங்களை பார்த்த பிறகு உதயநிதியின் ரசிகையாகவும் மாறி விட்டேன். அதோடு அவர்களுடன் டூயட் பாட வேண்டும் என்ற ஆசையும் ஏற்பட்டிருக்கிறது. விரைவில் எனது ஆசை கைகூடும் என்று நினைக்கிறேன்.


உங்களது ரோல் மாடல் நடிகை யார்?


அப்படியெல்லாம் யாரும் கிடையாது. நன்றாக நடித்திருந்தால் அது யாராக இருந்தாலும் ரசிப்பேன். ஆனால் அவர்களை பின்பற்ற வேண்டும் என்று நினைத்ததில்லை. மேலும், தற்போது நான் தமிழ் நடிகையாகி விட்டதால், தமிழ் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டுள்ளது.


முக்கியமாக நகரத்து பின்னணியில் பிறந்து வளர்ந்த எனக்கு கிராமத்து பெண்களைப்போன்று பாவாடை தாவணி, புடவை காஸ்டியூம் அணிந்து பக்கா கிராமத்து பெண்ணாக நடிக்க வேண்டும் என்று ஆசை ரொம்பவே உள்ளது. அந்த மாதிரியான வாய்ப்புகள் கிடைக்கும்போது அதை உணர்ந்து கதாபாத்திரமாக வாழ்ந்து காட்டுவேன்.


தமிழ் தவிர வேறு என்னென்ன மொழிகளில் நடிக்கிறீர்கள்?


தமிழ் சினிமாதான் முதலில் எனக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்தது. அதனால், இந்த மொழியில் முன்னணி நடிகையாக வேண்டும் என்பதுதான் எனது தற்போதைய எண்ணமாக உள்ளது. அதனால் இங்கு ஒரு நிலையான இடத்தை பிடிக்கும் வரை வேறு மொழிகளில் நடிப்பது பற்றி யோசிக்கவே மாட்டேன். அப்படியே வந்தாலும் அப்புறம் பார்க்கலாம் என்று தட்டிக்கழித்து விடுவேன் என்கிறார் ஐஸ்வர்யா தத்தா.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in