'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சமீபகாலமாக சின்னத்திரைகளில் நடத்தப்படும் சில நிகழ்ச்சிகளில் ரசிகர்களையும் இழுத்து வருகிறார்கள். ஆரம்பத்தில் பிடித்த பாடல், பிடித்த காமெடி என மட்டுமே நேயர்களுடன் லைவ் புரோகிராம் நடத்தி வந்தனர். ஆனால் இப்போது அரசியல் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளுக்கு கருத்துக்களும் நேயர்களிடம் கேட்கப்பட்டு வருகிறது.
அதிலும், விஜய் டிவி நடத்தி வரும் ஜூனியர் சிங்கர் நிகழ்ச்சியில் இறுதியாக தேர்ந்தெடுக்கப்படும் போட்டியாளர்களை நேயர்கள் கொடுக்கும் ஓட்டை வைத்துதான் முடிவு செய்கிறார்கள். அந்த வகையில், தமிழ்நாடு மட்டுமின்றி உலகமெங்கிலும் உள்ள தமிழர்களும் தங்களுக்கு பிடித்த பாடகர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் ஓட்டளிக்கிறார்கள்.
அந்த வகையில், சமீபத்தில் நடந்து முடிந்த நான்காவது சீசன் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தமிழ்நாட்டில் மட்டுமே சுமார் 2 கோடி பேர் எஸ்எம்எஸ் மூலம் வாக்களித்தார்களாம். அப்படி செய்யப்பட்ட ஒவ்வொரு எஸ்எம்எஸ்க்குமே 5 ரூபாய் வசூலிக்கப்பட்டதாம். ஆனால் 5 ரூபாய் வசூலித்த விஜய் டிவி அதில் ஒரு எஸ்எம்எஸ்க்கு ஒரு ரூபாய்தான் சம்பந்தப்பட்ட செல்போன் நிறுவனத்துக்கு கொடுத்ததாம்.
அதேபோல், வெளிநாடுகளில் இருந்து செய்யப்பட்ட ஒவ்வொரு எஸ்எம்எஸ்க்கும் தலா 15 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டதாம். அதிலும் செல்போன் நிறுவனத்துக்கு 1 ரூபாய் தான் கொடுக்க்கப்பட்டதாம். அந்த வகையில், அந்த நிகழ்ச்சியில் ஒரு நாள் மட்டும் அதாவது இரவு 7 மணியில் தொடங்கி 12 மணி வரை வாக்களித்தவர்கள் செலுத்திய எஸ்எம்எஸ் கட்டணமே விஜய் டிவிக்கு சுமார் 20 கோடியை சம்பாதித்து கொடுத்துள்ளதாம்.